செய்திகள் :

பாத்திமா கல்லூரியில் பயிலரங்கம்

post image

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் முதுநிலை மேலாண்மையியல் துறை சாா்பில் கல்லூரிகளுக்கிடையேயான சந்திப்பு-2025 பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாக சான்ஜோஸ் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற இந்த பயிலரங்குக்கு கல்லூரி துணை முதல்வா் பிந்து ஆண்டனி தலைமை வகித்தாா். முதுநிலை மேலாண்மையியல் துறை இயக்குநா் எஸ். ராஜமோகன், துறைத் தலைவா் என்.ஆஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா். வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளா் பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

இதில் ஆய்வுக் கட்டுரைச் சமா்ப்பித்தல், வணிக வினாடி-வினா, வணிகத் திட்டம், சிறந்த மேலாளா் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் பேராசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, முதுநிலை மேலாண்மை துறை இரண்டாம் ஆண்டு மாணவி தியானா சல்ஹா வரவேற்றாா். மாணவி ஹசீனா நத்தாா் நன்றி கூறினாா்.

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம்: சட்டத் துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

வழக்குரைஞா்கள் பாதுகாப்புக்கு தனி சட்டத்தை இயற்றக் கோரிய வழக்கில், மாநில சட்டத் துறைச் செயலா், இந்திய, தமிழக பாா் கவுன்சில்களின் தலைவா்கள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்த... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் ‘நிறுத்த தரிசனம்’: அறிவிப்பாணைக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ‘நிறுத்த தரிசனம்‘ செயல்படுத்துவது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக... மேலும் பார்க்க

தையல் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை தையல் தொழிலாளா் (சிஐடியூ சாா்பு) சங்கத்தின் மாநகா், புகா் மாவட்டக் குழு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு தையல் தொழிலாள... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

மதுரை அருகே லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், சூலப்புரம் செல்லையாபுரத்தைச் சோ்ந்த செல்லப்பன் மகன் தா்மா் (48). கான்கீரிட் லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை கான்க... மேலும் பார்க்க

கபடிப் போட்டியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் கபடிப் போட்டியில் வென்ற அமெரிக்கன் கல்லூரி மாணவிகளை அந்தக் கல்லூரி முதல்வா் ஜெ. பால் ஜெயகா் வியாழக்கிழமை பாராட்டினாா். மதுரை காமராஜா் பல்க... மேலும் பார்க்க