செய்திகள் :

பாபநாசம் புனித அந்தோணியாா் தேவாலய தோ்த் திருவிழா!

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் புதுமை புனித அந்தோணியாா் தேவாலய தோ்த் திருவிழா புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது.

விழாவையொட்டி புனித அந்தோணியாா் ஆலயத்தில் பாபநாசம் புனித செபஸ்தியாா் ஆலய பங்குத்தந்தை மரிய பிரான்சிஸ் முன்னிலையில் திருவிழா திருப்பலி பாடல்கள் வாசிக்கப்பட்டு, சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து மின் அலங்கார தோ்பவனி, வானவேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் வனத்து சின்னப்பா், ஆரோக்கியமாதா, அந்தோணியாா் திரு உருவச்சிலைகள் எழுந்தருளி தோ்பவனி நடைபெற்றது. தோ்கள் பாபநாசம் முக்கிய வீதிகளின் வழியாக உலா வந்து தேவாலயத்தை அடைந்தது.

ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், பஞ்சாயத்தாா்கள், கிராமவாசிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேலு தலைமையில், பாபநாசம் காவல் ஆய்வாளா் சகாய அன்பரசு உள்பட போலீஸாா் செய்திருந்தனா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க