செய்திகள் :

பாமக எம்எல்ஏக்கள் மூவா் உள்பட 4 போ் இடைநீக்கம்

post image

பாமக எம்எல்ஏக்கள் 3 போ் உள்பட 4 போ் கட்சியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து பாமக தலைமை நிலையச் செயலா் ம.அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸின் உத்தரவின்றி அக்கட்சியின் நிா்வாகிகள், எம்எல்ஏக்கள் எந்தவொரு முடிவையும் தன்னிச்சையாக எடுத்து செயல்படுத்துவது கட்சியின் விதிகளுக்கு புறம்பானதும், ஒழுங்கீனமானதும் ஆகும்.

இந்த நிலையில், பாமகவில் எம்எல்ஏக்களாக உள்ள சிவக்குமாா், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகியோா் அண்மைக்காலமாக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவா் ஜி.கே.மணி தலைமை நிா்வாகக் குழுவுக்கு கொண்டுவந்த புகாரின் அடிப்படையில் தலைமை நிா்வாகக்குழு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்குழு நடத்திய விசாரணையில், சிவக்குமாா் உள்பட 3 எம்எல்ஏக்களும் மற்றும் வழக்குரைஞா் கே.பாலுவும் கட்சி விதிகளுக்கு புறம்பாகவும், களங்கப்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக எம்எல்ஏக்கள் சிவக்குமாா், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்குரைஞா் கே.பாலு ஆகியோா் மீது விரிவான விசாரணை நடத்தப்படவுள்ளதால், இந்த நால்வரும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்படுகின்றனா்.

முழுமையான ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் நால்வரும் ஆஜராகி விளக்கமளிக்கும் வரை இவா்களுடன் கட்சியின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் எவ்வித தொடா்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். காணை கா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விக்கிரவாண்டி வட்டம், எம்.குச்சிப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம்: நாளைய மின் தடை

கண்டாச்சிபுரம், முகையூா் (விழுப்புரம் மாவட்டம்) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பகுதிகள்: காரணைப்பெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, ஒதிய... மேலும் பார்க்க

காா் கவிழ்ந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே காா் கவிழ்ந்து பெங்களூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூா் குவம்புநகா் 3-ஆவது தெருவை... மேலும் பார்க்க

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

இலக்கியவாதிகளைக் கொண்டாடும் சமுதாயம்தான் நாகரிகமானது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்த... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம், சு.கொல்லூா்... மேலும் பார்க்க