செய்திகள் :

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

post image

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை அன்புமணி நேரில் சந்தித்தார்.

ராமதாஸை வைத்து நாடகம் நடத்துகிறீர்களா என்றும், அவருக்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன் என்றும் அன்புமணி கூறியிருந்தார். இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளரான பாமக எம்.எல்.ஏ அருள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸைச் சந்தித்த ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்
ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள்

“பாமக நிறுவனரும் கட்சியின் தலைவருமான டாக்டர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , ஆஞ்சியோகிராம் சிகிச்சை பெற்றார்.

 அப்போது அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்த,  முதல்வர் ஸ்டாலின்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் மருத்துவர் ராமதாஸ் அவர்களை  சந்தித்து நலம் விசாரித்தனர்.

அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அப்போலா  மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, மருத்துவரை மட்டும்  சந்தித்து பேசிவிட்டு,  ராமதாஸ் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாஸ் குறித்து தவறான தகவலையும் செய்தியாளர்களிடம் தெரிவித்து பதற்றத்தை ஏற்படுத்தினார்.  

ராமதாஸ் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மட்டுமே செய்யப்பட்டது. அவர் ஐசியூவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. ஆனால் ராமதாஸ் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என செய்தியாளர்களிடம் பேட்டியை கொடுத்து ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அன்புமணி.  

அன்புமணி
அன்புமணி

அன்புமணி ராமதாஸ் சிகிச்சை குறித்து தவறான தகவலை பரப்புகிறார். ஒரு மகன் என்ற கடமையிலிருந்து அன்புமணி தவறிவிட்டார். பெற்றெடுத்த தந்தையை, கட்சியை விட்டு துரத்த வேண்டும் என்று செயல்பட்டவர்தான் அன்புமணி.நேற்று அன்புமணி,  தொலைத்து விடுவேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.

 பாட்டாளி மக்கள் கட்சியையும், தொண்டர்களையும் தான் தொலைத்து விட்டார். அன்புமணி தற்போது ஆற்றாமையின் வெளிப்பாடு காரணமாக ஏதேதோ பேசி வருகிறார். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த பாமக பொதுக்குழு கூட்டம் வரும் 26 ஆம் தேதி,  ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது” என்று பேசியிருக்கிறார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா, நாடகமா?

காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்ன... மேலும் பார்க்க

சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள்; டென்ஷனான அமெரிக்கா - மீண்டும் வர்த்தகப் போர்? | Explained

அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் வர்த்தகப் போர் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. ஏன்? கடந்த 9-ம் தேதி, ஹோல்மியம், எர்பியம், துலியம், யூரோபியம், யட்டர்பியம் ஆகிய ஐந்து கனிமங்களை ஏற்றுமதி செ... மேலும் பார்க்க

கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.... மேலும் பார்க்க

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதம... மேலும் பார்க்க