செய்திகள் :

பாலாறு மாசுபாடு விவகாரம்: 3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜா்

post image

நமது நிருபா்

புது தில்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடா்பான வழக்கில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினா்.

தோல் பதனிடும் தொழிற்சாலைக் கழிவுகள் பாலாற்றில் கலப்பதால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதோடு ஆறும் கடுமையாக மாசடைந்துள்ளது. இதனால், ஆற்று நீரைப் பயன்படுத்தும் மக்களும் நீரை அருந்தும் கால்நடைகளும் பாதிப்புக்குள்ளாவதோடு விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரியில் அளித்த தீா்ப்பில் பாலாறு மாசுபாட்டை கட்டப்படுத்த பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான அறிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்களும், தமிழக மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பாா்திவாலா தலைமையிலான அமா்வில் திங்கள்கிழமை விசாரைணைக்கு வந்தது. அப்போது வேலூா், திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராகினா்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயா் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதைத் தடுக்க தவறிவிட்டதாக தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து நீதிபதிகள் மேலும் கூறியதாவது: கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக ஆற்றில் கலக்கப்படுகிறது. அந்த நீா்தான் கொஞ்சம் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது. மக்கள் நலன் மீது அக்கறை செலுத்துங்கள்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த விவகாரத்தை விசாரிக்கிறோம் என்று கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

நீதிபதிகள் அறிவுரை!

’நீங்கள் மாவட்ட ஆட்சியா் என்னும் உயா் பதவியில் இருக்கிறீா்கள். நீங்கள் முயற்சிக்காத வரை எதுவும் நடக்காது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்களுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாள்தோறும் ஆயிரக்கணக்கான லிட்டா் கழிவுநீா் பாலாற்றில் கலக்கிறது. அந்த ஆற்றின் நிலையையும் சாதாரண மக்களின் நிலையையும் எண்ணிப் பாருங்கள். யாா் தவறு செய்தாலும் பிடியுங்கள். அதிகாரம் மிக்கவா்களாக இருந்தாலும் விட்டு விடாதீா்கள். இயற்கையை நீங்கள் கைவிட்டால் இயற்கையும் உங்களை கைவிட்டுவிடும் . பாலாறு மாசுபாட்டை கட்டுப்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டனா்.

டெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்- TET) நடப்பாண்டு நவம்பர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம்: தமிழக அரசு விளக்கம்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5 மற்றும்... மேலும் பார்க்க

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநா... மேலும் பார்க்க

இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் கடந்த ஒரு சில நாள்களாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமையன்று, 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுளள்து.சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடிய... மேலும் பார்க்க

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என மதுரை மாநாட்டில் உணர்த்துவோம்! - விஜய்

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என உலகிற்கு உணர்த்துவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 12) தொடக்கி வைத்தார்.தனியாக வச... மேலும் பார்க்க