செய்திகள் :

பாலியல் கொடுமை: ``பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? இரவு நேரங்களில் வெளியே வராதீர்கள்'' - மம்தா பானர்ஜி

post image

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி இரவில் வெளியில் வந்தபோது மூன்று பேர் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒடிசாவைச் சேர்ந்த அம்மாணவி, தன்னுடைய ஆண் நண்பருடன் நள்ளிரவில் விடுதியில் இருந்து வெளியே வந்தார்.

கல்லூரி வாசலுக்கு மாணவி வந்தவுடன், மர்ம நபர்கள் மாணவியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மாணவியின் ஆண் நண்பர் அங்கிருந்து ஓடிவிட்டார். இந்த குற்ற சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? - மம்தா கேள்வி

இது போன்று மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் நடந்திருக்கின்றன. இதனால் தற்போது நடந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

இதற்கு பதிலளித்துள்ள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ''பாதிக்கப்பட்ட மாணவி தனியார் கல்லூரியில் படிக்கிறார். அப்படி இருக்கும் போது அவரின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

இரவு 12.30 மணிக்கு விடுதியில் இருந்து எப்படி வெளியில் வந்தார். நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. போலீஸார் அனைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களையும் இரவு கலாச்சாரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவர்களை வெளியே வர அனுமதிக்கக் கூடாது. மாணவிகள் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து வரும் மாணவிகள் இரவு நேரங்களில் வெளியில் வராதீர்கள்.

தேவைப்படும்போது தேவையான இடத்திற்கு செல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் போலீஸார் வந்து பாதுகாத்துக்கொண்டிருக்க முடியாது.

கல்லூரி இருக்கும் இடம் ஒரு வனப் பகுதி. இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இது போன்ற சம்பவங்கள் வெளி மாநிலத்தில் நடந்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

பாஜக கடும் கண்டனம்

உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசாவில் இது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. அங்குள்ள அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

ஒடிசாவின் கடற்கரையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. குற்றவாளிகள் மீது ஒடிசா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இக்கருத்துக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஷெஹ்சாத் பூனவல்லா
ஷெஹ்சாத் பூனவல்லா

இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா அளித்த பேட்டியில்,

''முதல்வர் மம்தா பானர்ஜி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு பதில் அவர்களை வெளியில் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார்.

அப்படிப்பட்ட அரசு ஆட்சியில் இருக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஒரு அராஜகவாத, இதயமற்ற மம்தா மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதை இப்போது உணர்ந்துள்ளனர்.

அவர் ராஜினாமா செய்ய வேண்டும். மம்தா பானர்ஜி நடந்த சம்பவத்திற்கு மகள்களை குறை கூறுகிறார். அதேசமயம் குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஆதரிக்கிறார்.

இதற்கு முன்பும் மம்தா பானர்ஜி இதே போன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருக்கிறார்'' என்றார்.

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வா... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``காவல்துறையினர் ஏன் எங்களை வரவேற்றனர்?'' - ஆதவ் அர்ஜுனா கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழ... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது 41 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.இதில் பாதிக்கப்பட்டவர்க... மேலும் பார்க்க

``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

சதானந்தன் மாஸ்டர்கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சதானந்தன் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் சி.பி.எம் நிர்வாகியாக இருந்தார் சதானந்தன் மாஸ்டர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் நிர்வாகிகளால் தாக்குதலுக... மேலும் பார்க்க

`இந்து கடைகளில் பொருட்கள் வாங்குங்கள்’ - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு; விளக்கம் கேட்கும் அஜித் பவார்

மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முழு அளவில் தயாராகி வருகின்றனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந... மேலும் பார்க்க