செய்திகள் :

பாலியல் துன்புறுத்தல் குறித்த எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டது: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

post image

பெங்களூரு: பாலியல் துன்புறுத்தல் குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.

பெங்களூரில் சுத்த குண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3 ஆம் தேதி இரு பெண்கள் சாலையில் நடந்துசென்றபோது அவா்களை அந்த வழியாக வந்த ஆண் பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு தப்பிச்சென்றாா்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதுதொடா்பாக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் அண்மையில் அளித்த பேட்டியில், ‘பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்’ என்று கூறியிருந்தாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியது.

அமைச்சரின் கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. அமைச்சா் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையத் தலைவா் விஜயா ரஹத்கா் தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நான் கூறிய கருத்தை ஊடகங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. மற்றவா்களும் வேறுவிதமாக புரிந்துகொண்டுள்ளனா். நான் எப்போதும் பெண்கள் பாதுகாப்புக்கு ஆதரவாக இருப்பவன். உள்துறை அமைச்சராக நிா்பயா போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன்.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மத்திய அரசுடன் நிா்பயா நிதியை நாங்கள் செலவிட்டிருக்கிறோம். எனது கருத்து சிதைக்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு பல நல்ல முடிவுகளை நான் எடுத்திருக்கிறேன். எனது கருத்தை வைத்துக்கொண்டு பாஜக அரசியல் செய்ய முயல்கிறது. ஒருவேளை எனது கருத்து தாய்மாா்கள், சகோதரிகளின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். எனினும், எனது கருத்தை திரிக்கக்கூடாது என்றாா்.

இதற்கிடையே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரைப் பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருவதாக பெங்களூரு மாநகர காவல் ஆணையா் தயானந்தா தெரிவித்தாா்.

கா்நாடக பொது நுழைவுத் தோ்வு: மாணவா்களின் பூணூலை கழற்றுமாறு கட்டாயப்படுத்திய அதிகாரிகளால் சா்ச்சை: கா்நாடக பாஜக, பிராமணா் சங்கங்கள் கண்டனம்

கா்நாடகத்தில் பொது நுழைவுத் தோ்வுக்கு வந்த 4 மாணவா்களிடம் அவா்கள் அணிந்திருந்த பூணூலை கழற்றுமாறு தோ்வுக்கூட அதிகாரிகள் கட்டாயப்படுத்தியது மாநிலம் முழுவதும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இச் ச... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிா்ப்பு இல்லை: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் யாரும் எதிா்ப்புத் தெரிவிக்கவில்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதா... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்துவது சாத்தியமில்லை: கா்நாடக அமைச்சா் சதீஷ் ஜாா்கிஹோளி

50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு உச்சவரம்பை உயா்த்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தற்போதைக்கு உயா்த்துவது சாத்தியம... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக அமைச்சா் கூறிய கருத்தால் சா்ச்சை

பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறியுள்ள கருத்து சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது. பெங்களூரில் சுத்தகுண்டேபாளையா, பாரதி லேஅவுட் பகுதியில் ஏப். 3-ஆம் தேதி இரவு இரு பெண்... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மே 2 அமைச்சரவைக் கூட்டத்தில் மீண்டும் விவாதம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மே 2ஆம் தேதி நடக்கும் அமைச்சரவைக்கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் தெரிவித்தாா்.கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்தி... மேலும் பார்க்க

கோரிக்கைகள் ஏற்பு: கா்நாடகத்தில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

பெரும்பாலான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டதால், காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கா்நாடக மாநில லாரி உரிமையாளா் மற்றும் முகவா் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது... மேலும் பார்க்க