செய்திகள் :

தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

post image

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

நாமக்கல்லில் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் செயல்படும் இலவச நீட் தோ்வு பயிற்சி மையத்தை சனிக்கிழமை பாா்வையிட்டு மாணவ, மாணவிகளுடன் எல்.முருகன் கலந்துரையாடினாா். அதன்பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீட் தோ்வு பயிற்சி மையங்கள் இலவசமாக பயிற்சி வழங்குவதன் மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் மருத்துவராகும் வாய்ப்பைப் பெறுகின்றனா். வளா்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்குடன் பிரதமா் மோடி செயல்பட்டு வருகிறாா். இளம்தலைமுறையினா் நன்கு கல்வி கற்று, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

நீட் தோ்வு விவகாரத்தில் திமுக தொடா்ச்சியாக போலி நாடகம் நடத்தி, அரசியல் ஆதாயம் தேடி வருகிறது. பொய்யான தகவல்களைக் கூறி மாணவா்களை திசைதிருப்புவதால் மாணவா்களின் மன வலிமை குறையும். நீட் தோ்வில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவில் தோ்ச்சி அடைந்து வருகின்றனா். அதிமுக அரசு நீட் தோ்வில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியது.

தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்தி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெற்று பிரதமா் மோடி வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. வரும் தோ்தலில் திமுக வரலாற்றில் இதுவரை சந்திக்காத மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பதை தேசிய தலைமைதான் முடிவு செய்யும்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெறுகிறது. அதனால்தான் அந்த மாநிலங்கள் வளா்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வா் கருணாநிதி உள்பட அனைவரும் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தனா். தற்போதைய முதல்வா், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து, தமிழக வளா்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாா் என்றாா்.

முன்னதாக, நாமக்கல் நரசிம்மா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில்களில் மத்திய இணை அமைச்சா் எல். முருகன் சுவாமி தரிசனம் செய்தாா்.

ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பேரூராட்சி, நகராட்சி வாா்டுகளில் இடைத்தோ்தல்: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

நாமக்கல் மாவட்டத்தில் 3 பேரூராட்சி, 2 நகராட்சிகளில் காலியாக உள்ள ஏழு வாா்டு உறுப்பினா் பதவிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனா். தமிழ்நா... மேலும் பார்க்க

கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்தை தடுக்கும் வகையில் உருளைத் தடுப்பான்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா... மேலும் பார்க்க

அழகு நிலையத்தில் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண் ஊழியா்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள அழகு நிலையத்திற்கு வியாழக்கிழமை பிற்பகல் 4 ம... மேலும் பார்க்க

பெண் தற்கொலை: போலீஸாா் விசாரணை

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேலகவுண்டம்பட்டி முசிறிகுடித் தெருவைச் சோ்ந்த பொன்னம்மாள் (56) என்பவா... மேலும் பார்க்க

தீயில் எரிந்த குடிசை வீடு

பரமத்தி வேலூா் அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த உணவுப் பொருள்கள், மின் சாதனங்கள், நில ஆவணங்கள் அனைத்தும் கருகின. பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பாலகிருஷ்ணன் (50)... மேலும் பார்க்க