செய்திகள் :

'கூட்டணி வேறு... கொள்கை வேறு; வக்பு சட்டத்துக்கு எதிராக வாக்களித்துள்ளோம்' - வேலுமணி

post image

கோவை அதிமுக சார்பில் நீட் தேர்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமண கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வின் பெயரால் திமுக அரசு மக்களை ஏமாற்றியதால் 22 மாணவ - மாணவிகள் உயிரிழந்தார்கள்.

வேலுமணி

மக்களை ஏமாற்றுவதற்கு திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் திமுக கூட்டணியில் இருக்கும்போது, திமுகவின் காந்திராஜன் கல்வி அமைச்சராக இருக்கும் போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.

மக்களை ஏமாற்ற முடியாது

அப்போது நீட் தேர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. திமுக அமைச்சர் பொன்முடி பெண்களை மிகவும்  இழிவாக பேசியதற்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் பல இடங்களிலும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

நீட் தேர்வு

நீட் தேர்வை காண்பித்து மத்திய அரசு மீது பழியைபோட்டு, திமுக சட்டமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எடப்பாடியார் தலைமையிலான ஆட்சியில் 7.5% சதவிகிதம் மருத்துவ இடஒதுக்கீடு கொண்டு வந்ததால் இன்று ஏராளமான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள்.

 நீட் ரகசியம்?

தமிழகத்தில் திமுக நீட் ரகசியம் இருப்பதாக சொல்லி, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் ரத்து செய்யப்படும் என்றும் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினர். அதிமுகவை பொறுத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. இப்போது இருப்பது தேர்தலுக்கான கூட்டணி. வக்பு சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளோம்.

வக்பு வாரியம்

சட்டமன்றத்தில் கொண்டு வந்த வக்புக்கு எதிரான தீர்மானத்துக்கும் ஆதரவு தெரிவித்துள்ளோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் 200  தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையும்.” என்றார்.

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" - கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார்.அந்த பேட்டியில், 'பா.ம.க, தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா?' என்று ... மேலும் பார்க்க

மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" - வெடிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான துரை வைகோ அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. துரை வைகோவுக்கும், கட்சியின் தல... மேலும் பார்க்க

கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை மண்டல பாஜக சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. நயினார் வருவதற்... மேலும் பார்க்க

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' - நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தன... மேலும் பார்க்க

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெ... மேலும் பார்க்க

`இறந்து' விட்டதாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு; ஆம்புலன்ஸில் திடீரென அசைந்த உடல்... என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், தோகைபாடியை சேர்ந்தவர் பிரகாஷ். மிகுந்த உடல் நலக்குறைகளுடன் புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். 10 நாள்களாகத் தீவிர சிகிச்சை பெற்று ... மேலும் பார்க்க