செய்திகள் :

பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

post image

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணிபுரிந்தபோது, அங்கு படித்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கத்ததாக கெபிராஜ் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில், கெபிராஜ் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், கெபி ராஜுக்கான தண்டனை விவரங்கள் நாளை (ஆக. 12) அறிவிக்கப்படும் என்று சென்னை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

A Chennai women's court has convicted karate coach Kebiraj in a sexual assault case.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு தவெக துணை நிற்கும்!

சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்த்து, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.கரோனா போன்ற ... மேலும் பார்க்க

மதுரை தவெக மாநாட்டிற்கு காவல் துறை அனுமதி!

மதுரையில் நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு காவல் துறை பாதுகாப்பு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரியிருந்த நிலையில்... மேலும் பார்க்க

விஜய் - தூய்மைப் பணியாளர்கள் சந்திப்பு நிறைவு!

பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடனான தூய்மைப் பணியாளர்களின் சந்திப்பு நிறைவு பெற்றது. 11வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தவெக அலுவலகத்த... மேலும் பார்க்க

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, ரயில்களின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்... மேலும் பார்க்க