செய்திகள் :

சென்னை: பெண் ஊழியருக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை - இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!

post image

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் 19 வயதன இளம்பெண். இவர் அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 10.08.2025-ம் தேதி அந்த இளம்பெண் வேலைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே அந்தப் பெண், நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த இளைஞர் ஒருவர், இளம்பெண்ணை வழிமறித்தார். பின்னர் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இளைஞர் ஆபாச செயலில் ஈடுபட தொடங்கினார். அதனால் அந்த இளம்பெண் முகம் சுளித்ததோடு இளைஞரைக் கண்டித்தார். ஆனால், இளைஞரோ, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்களிடம் இளைஞரின் செயல் குறித்து கூறினார். அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இளைஞரை மடக்கி பிடிக்க முயன்றனர்.

பாலியல் தொல்லை ( சித்திரிப்புப் படம் )

உடனே இந்த இளைஞர், பைக்கை எடுத்துக் கொண்டு வேகமாக செல்ல முயன்றார். ஆனால் சாலையில் சென்றவர்கள் இளைஞரை ஓடிச் சென்று மடக்கிப் பிடித்ததோடு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த இளைஞரையும் பைக்கையும் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து பாலியல் தொல்லைக்குள்ளான இளம்பெண், ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்து தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து புகாராக கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபரின் பெயர் ஜெகதீஷ், (40) என்றும் இவர், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீஷை கைது செய்த போலீஸார் அவரின் பைக்கையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகதீஷ், சிறையில் அடைக்கப்பட்டார். ஜெகதீஷின் பின்னணி குறித்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரால் ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்... மேலும் பார்க்க

கொலையாளியுடன் செட்டிங்? - கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஜெயராமன். இவருக்கு நியூட்டன், பெனிட்டோ என்பவர்கள் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் ஜெயராமன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக, தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தந்துள்ளனர். ஆனால் ஜ... மேலும் பார்க்க

மும்பை: வீட்டை விட்டு ஓடி வந்த 12 வயது வங்கதேச சிறுமி; 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அவலம்

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் வருகின்றனர். அவர்கள் மும்பை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்கின்றனர். இதே போன்று பங்களாதேஷில் வேலை வாங்கித்தருவதாக இந்த... மேலும் பார்க்க

கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

கோவை குனியமுத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 39 வயது பெண் திருமணமாகி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் காரை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துள்ளனர். ட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைதின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டறியப்பட்டது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இட... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புது... மேலும் பார்க்க