செய்திகள் :

பழனி: செங்கல் சேம்பரில் வாலிபர் மர்ம சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!

post image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே தும்பலபட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) , இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனியார் செங்கல் சேம்பரில் வேலை செய்து வருகிறார். இந்த சேம்பரில் வடமாநில இளைஞர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை இரவு சரவணன் சேம்பருக்கு செல்வதாக கூறிச் சென்ற நிலையில் மறுநாள் காலை வரை திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பழனி தும்பலபட்டி அருகே உள்ள தனியார் செங்கல் சேம்பரில் சரவணன் இறந்து கிடந்துள்ளார் . இது குறித்து வேலைக்கு வந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர் . இதையடுத்து வந்த உறவினர்கள் வடமாநில இளைஞர்களால் சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சரவணன் உடலை போலீசார் மீட்க விடாமல் தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

வாலிபர் மர்ம சாவிற்கு அழுதபடியே மாவட்ட ஆட்சியரிடம். மனு கொடுக்க வந்த அவரது குடும்பத்தினர்

இது குறித்து உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இறந்த சரவணன் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சரவணன் உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியே உள்ள சாலையில் குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் உயிரிழந்த சரவணனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்த பின்பே உடலை வாங்குவோம் என திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வெளியே உயிரிழந்த சரவணனின் உறவினர்கள் அமர்ந்துள்ளனர்.

கொலையாளியுடன் செட்டிங்? - கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்

சென்னையை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் ஜெயராமன். இவருக்கு நியூட்டன், பெனிட்டோ என்பவர்கள் நண்பர்களாகியுள்ளனர். இவர்கள் ஜெயராமன் புதிய ஆட்டோ வாங்குவதற்காக, தனியார் நிறுவனத்தில் கடன் பெற்று தந்துள்ளனர். ஆனால் ஜ... மேலும் பார்க்க

மும்பை: வீட்டை விட்டு ஓடி வந்த 12 வயது வங்கதேச சிறுமி; 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அவலம்

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் வருகின்றனர். அவர்கள் மும்பை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்கின்றனர். இதே போன்று பங்களாதேஷில் வேலை வாங்கித்தருவதாக இந்த... மேலும் பார்க்க

கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

கோவை குனியமுத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 39 வயது பெண் திருமணமாகி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் காரை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துள்ளனர். ட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைதின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டறியப்பட்டது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இட... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புது... மேலும் பார்க்க

புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை

கரன்சிகளால் காற்றில் பறக்கவிடப்படும் விதிகள்சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநி... மேலும் பார்க்க