செய்திகள் :

கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளைஞர் கைது

post image

கோவை குனியமுத்தூர் காவல் சரகத்துக்குட்பட்ட கோவைப்புதூர் பகுதியில் 39 வயது பெண் திருமணமாகி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர்கள் தங்களின் காரை தனியார் கால் டாக்ஸி நிறுவனத்துடன் இணைத்துள்ளனர்.

டாக்ஸி
டாக்ஸி

அந்தக் காருக்கு அதே கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த சமீர் (27) என்ற இளைஞரை டிரைவராகவும் நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த 3 நாள்களான நிலையில், அவர் கடந்த 8-ம் தேதி தன் செல்போன் பழுதாகியுள்ளதாகக் கூறி பெண்ணிடம் செல்போன் கேட்டுள்ளார்.

இந்த வேலைக்கு செல்போன் முக்கியம் என்பதால், அந்தப் பெண் தன்னுடைய பழைய போனில் உள்ள போட்டோ, வீடியோக்களை நீக்கிவிட்டு சமீரிடம் கொடுத்துள்ளார்.

அன்றைய தினம் இரவு 10 மணியளவில் சமீர் அந்தப் பெண்ணுக்கு செல்போனில் அழைத்துள்ளார்.

“உங்களின் நிர்வாண புகைப்படத்தை செல்போனில் பார்த்தேன். மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.” என்று கூறியுள்ளார்.

செல்போன்

அதிர்ச்சியடைந்த பெண், “எதற்காக என்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பார்க்கிறீர்கள். செல்போனை உடனடியாக ஒப்படையுங்கள்” என்று கூறியுள்ளார்.

இரவு 11 மணியளவில் சமீர் பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண், “எதற்காக என்னிடம் அப்படிப் பேசினீர்கள்” என்று கேட்டுள்ளார்.

செல்போனைக் கொடுக்காமல் சமீர், “நீங்கள்தான் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறீர்கள்.” என்று தகாத வார்த்தைகளில் பேசி அத்து மீறியுள்ளார்.

ARREST
கைது

அந்த நேரத்தில் கணவர் அலுவலகத்தில் இருந்ததால், அவர் அக்கம் பக்கத்தினர் உதவியை நாடியுள்ளார். அவர்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், சமீரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

மும்பை: வீட்டை விட்டு ஓடி வந்த 12 வயது வங்கதேச சிறுமி; 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அவலம்

அண்டை நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக அடிக்கடி ஏராளமானோர் இந்தியாவிற்குள் வருகின்றனர். அவர்கள் மும்பை போன்ற நகரங்களில் கூலி வேலை செய்கின்றனர். இதே போன்று பங்களாதேஷில் வேலை வாங்கித்தருவதாக இந்த... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: புலம்பெயர் தொழிலாளர் கொலை வழக்கில் திருப்பம்; மேற்கு வங்க இளைஞர் கைதின் பின்னணி என்ன?

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 31-ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு ஆண் சடலம் கண்டறியப்பட்டது. உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், பொள்ளாச்சி காவல்துறையினர் சம்பவ இட... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``ரெஸ்டோ பாரில் இளைஞர் உயிரிழக்க காரணம் போலீஸின் மாமூல்தான்'' - அதிமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி ரெஸ்டோ பார் ஊழியர் ஒருவரால் தமிழக இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க-வின் புது... மேலும் பார்க்க

புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை

கரன்சிகளால் காற்றில் பறக்கவிடப்படும் விதிகள்சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநி... மேலும் பார்க்க

`பிரிந்த காதலை சேர்க்க' - பிளாக் மேஜிக் இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ரூ.16 லட்சத்தை இழந்த மும்பை பெண்

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்கள், முகநூல் பக்கங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் இப்போது உறவுகள் பேசிக்கொள்வதை விட போனில் தான் அதிகமான நேரம் மூழ்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பிறந்த நாள் மது விருந்தில் தகராறு - மாணவரை `ரெஸ்டோ' பார் ஊழியர் கொலை செய்த பின்னணி

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க