செய்திகள் :

உத்தரகண்டில் மஞ்சள் எச்சரிக்கை: மீட்பு பணியில் தொய்வு!

post image

உத்தரகண்டில் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்கள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 49 பேர் காணாமல் போனதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சிலபகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் கிட்டத்தட்ட பாதி கிராமமே புதைந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தராலியைச் சுற்றியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இணைக்கும் கங்னானி அருகே முக்கியமான பெய்லி பாலம் ஓரளவு செயல்பாட்டு வந்துள்ளது. இருப்பினும், கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் தடைபட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், செவ்வாய், புதன்கிழமைக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சோங்காட், தப்ரானி, ஹர்சில் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை தடைபட்டுள்ளது. இதனிடையே உத்தரகண்ட் முழுவதும் பகலில் மழை பெய்யும் என்று ஐஎம்டி 'மஞ்சள்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்மோரா, டேராடூன், ஹரித்வார், நைனிடால், பௌரி, உதம் சிங் நகர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என 'சிவப்பு' எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

டேராடூனில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. உத்தரகாசியிலும் மழை பெய்தது. பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு ஒரு உணவகம் இருந்த இடத்தின் இடிபாடுகளை தோண்டி வருவதாக தராலியில் உள்ள இந்திய-திபெத்திய எல்லை காவல் துறை அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இடங்களை உத்தரகாசி மாவட்ட நீதிபதி பிரசாந்த் ஆர்யா, இன்று காலை ஹர்சிலுக்குச் சென்று, திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உருவான ஏரியின் நீர்மட்டத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆய்வு செய்தார்.

இந்த வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Early morning rain on Monday threatened to hamper the ongoing search and rescue operations in the flash floods-hit Dharali village, with the India Meteorological Department (IMD) issuing a 'yellow' alert for all districts of Uttarakhand.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலச்சரிவு: 9 தன்னார்வலர்கள் பலி!

பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த குடிநீர் கால்வாய் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 தன்னார்வலர்கள் உயிரிழந்தனர், மூன்று... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் ஒரு மணி நேரம் சிக்கித் தவித்த பயணிகள்!

ராய்ப்பூரில் ஏர் இந்தியா விமானத்தின் கதவு திறக்கப்படாததால் பயணிகள் ஒரு மணி நேரமாக சிக்கித் தவித்துள்ளனர். தலைநகர் தில்லியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ உள்பட சுமார் 160 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15... மேலும் பார்க்க

4 நகரங்கள் டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும்: ஒடிசா முதல்வர்!

புவனேஸ்வரைத் தவிர மேலும் நான்கு நகரங்களை டிஜிட்டல் மையங்களாக உருவாக்கப்படும் என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.கட்டாக், ரூர்கேலோ, சம்பல்பூர் மற்றும் பெர்ஹாம்பூருக்கு ஐடி மற்றும் மின்ன... மேலும் பார்க்க

ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது!

தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில... மேலும் பார்க்க

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் பாம்பு நுழைந்ததால் பரபரப்பு

ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் இருந்து பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரில் உள்ள ஒடிசா முதல்வரின் குறை தீர்க்கும் பிரிவு வளாகத்தில் திங்கள்கிழமை பாம்... மேலும் பார்க்க

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம்! பாகிஸ்தான் ராணுவ தளபதி

சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால், அதனை தகர்ப்போம் என்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி சையத் ஆசிம் முனீர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.மேலும், காஷ்மீரை பாகிஸ்த... மேலும் பார்க்க