செய்திகள் :

50 லட்சமா, 1 கோடியா..? - நீங்கள் நினைத்த தொகையை அடைய உதவும் கோல் கால்குலேட்டர்!

post image

உங்களால் அடுத்த 20 ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாயையோ அல்லது 1 கோடி ரூபாயையோ சேர்க்க முடியுமா?

இந்தக் கேள்வியைக் கேட்டால், பலரும் ‘’முடியாது’’ என்று அடித்துச் சொல்லிவிடுவார்கள்.

காரணம் என்ன என்று கேட்டால், ‘’இதெல்லாம் பெரிய தொகை. இந்த அளவுக்கான பணத்தை சேர்க்கும் அளவுக்கு எனக்கு சம்பளம் இல்லை’’ என்று சொல்வார்கள்.

இது சரியான சிந்தனையா எனில், நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். பிறகு நாம் ஏன் இப்படி நினைக்கிறோம்? இதற்குப் பல காரணங்கள்.

money
சம்பளம் - பணம்

அணுகுமுறை மாற்றம் வேண்டும்…

நம்மால் பெரிய அளவில் பணம் சேர்க்க முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கவே செய்கிறது. அதிகமான பணத்தை சேர்க்க வேண்டும் எனில், நம்மிடம் அதிகமான பணம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் பலரது மனதிலும் இருக்கிறது.

இந்த எண்ணம் சரியானதல்ல. நிறைய பணம் சேர்ப்பதற்கு நிறைய பணம் தேவை இல்லை. ஓரளவுக்குப் பணம் இருந்தாலே போதும். நாம் சேர்க்கும் பணம் கொஞ்சமாக இருந்தாலும் எந்த வகையான முதலீட்டில் நாம் பணத்தை முதலீடு செய்கிறோம். அந்த முதலீடு எந்த அளவு லாபம் தந்துகொண்டிருக்கிறது. அந்த முதலீட்டில் உள்ள ரிஸ்க் என்ன என்பதைப் புரிந்து முதலீடு செய்தால், யாராலும் அதிகமான பணத்தை சேர்க்க முடியும்.

சோதனையில் சிக்கிய பணம்

வருமானம் இல்லை என்கிற கவலை வேண்டாம்…

நிறைய பணம் சேர்க்கிற அளவுக்கு எனக்கு மாத வருமானம் இல்லை. என் சம்பளம் வெறும் 40,000 ரூபாய் என்று சொல்கிறவர்களும் இருக்கவே இருக்கிறார்கள். ஆனால், 10 அல்லது 20 ஆண்டுகளில் நீங்கள் மாதந்தோறும் எவ்வளவு பணத்தை சேர்த்தால், நீங்கள் சேர்க்க நினைக்கும் பணத்தை உங்களால் சேர்க்க முடியும் என்பதை துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும்.

பணம் பெருக்கும் கால்குலேட்டர்

நினைத்த தொகையை அடைய உதவும் கோல் கால்குலேட்டர்!

அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் எவ்வளவு பணத்தை சேர்க்க நினைக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டால், நீங்கள் சேர்க்க நினைக்கும் பணத்தை உங்களால் நிச்சயமாக சேர்க்க முடியும். இதற்கு உங்களுக்கு உதவக்கூடிய மிக முக்கியமான கருவியாக இருக்கிறது கோல் கால்குலேட்டர்.

இந்த கோல் கால்குலேட்டர் உங்களுக்குத் தேவை எனில், உங்கள் விவரங்களைத் தந்து இந்த பார்மைப் பூர்த்தி செய்யுங்கள்: https://forms.gle/M9sko6kixxBnEM6bA

அடுத்த 48 மணி நேரத்துக்கு மட்டுமே இந்த லிங்க் செயல்படும். எனவே, அருமையான இந்த வாய்ப்பைத் தவறவே விடாதீர்கள்!

- ஏ.ஆர்.குமார்

Personal Finance: உங்கள் வீட்டு பட்ஜெட் சூப்பரா, சுமாரா, இல்ல டேஞ்சரா இருக்கா? நிதிச் சுதந்திரம் - 3

‘‘சார், எனக்குப் பெரிசா பணம் சேர்க்கணுங்கிற ஆசை இருக்கு. ஆனா, சம்பாதிக்கிற பணம் அத்தனையும் செலவாயிடுது…’’‘‘சார், எனக்கு மாசாமாசம் 2 லட்சம் கிடைக்குது. ஆனா, 10,000 ரூபா மாசக் கடைசியில மிஞ்ச மாட்டேங்குத... மேலும் பார்க்க

Loan: கடனை முன்கூட்டியே அடைப்பது லாபமா? இல்ல இதுக்கு அபராதம் உண்டா?!

கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது காசு கொஞ்சம் கையில் கிடைத்திருக்கிறது. இந்தக் காசை வைத்து கடனை முன்னரே அடைக்கலாமா... கூடாதா என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இந்தச் சந்தேகத்திற்கா... மேலும் பார்க்க

Labham Webinar: அடைவோம் நிதிச் சுதந்திரம்! ₹5 கோடி நிதி சேர்ப்பது எப்படி?

நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைவது எப்போது? உங்கள் வாழ்க்கைக்குத்தேவையான செல்வத்தைச் சேர்த்து நிதிச் சுதந்திரம் பெற ஆசையா? லாபம் வழங்கும் 'சுய நிதி ... மேலும் பார்க்க

Personal Finance: வைகைப் புயல் வடிவேலு கற்றுத் தந்த பாடம்… நிதிச் சுதந்திரம் - 2

‘போக்கிரி’ படத்தில் வைகைப் புயல் வடிவேலு சின்னஞ்சிறுசுகளிடம் எக்குத்தப்பாக அடி வாங்கிய பிறகு சொல்லும் வசனம்: ‘‘எதையும் பிளான் பண்ணிப் பண்ணனும்…’’இந்த வசனம் எதற்குப் பொருந்துமோ, பொருந்தாதோ, நாம் நிதிச்... மேலும் பார்க்க

சுதந்திரம் வந்தாச்சு... ஆனால், நிதிச் சுதந்திரம் கிடைச்சுடுச்சா? நிதிச் சுதந்திரம் - 1

நம் தாய் நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்து 79-ஆம் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. பிரிட்டீஷ்காரர்கள் நம் நாட்டைத் தொடர்ந்து 150 ஆண்டுகளுக்குமேல் கொள்ளை அடித்ததன் விளைவாக, பொருளா... மேலும் பார்க்க

வெளிநாடு வாழ் இந்தியர்கள் ₹10 கோடி நிதி சேர்ப்பது எப்படி?

'கடந்த 10 ஆண்டுகளாக சொந்த மண்ணை விட்டு கண் காணாத ஏதோவொரு தேசத்தில் சொந்த பந்தங்களை எல்லாம் விட்டு வேலை செய்து வருகிறேன். ஆனால் இதெல்லாம் எதற்கு?' பிழைப்புக்காக தாய் நாட்டை விட்டுப் போன எல்லோரும், ஏதோவ... மேலும் பார்க்க