செய்திகள் :

டிரம்ப் வரி உயர்வு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!

post image

உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார்.

ரஷியாவுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து மோடி கேட்டறிந்தார்.

அத்துடன், விரைவில் உக்ரைனில் அமைதி திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்தியாவின் நிலைத்தன்மையையும் மோடி எடுத்துரைத்தார்.

உக்ரைனில் இயல்பு நிலை திரும்புவதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்ய, இந்தியா தயாராக உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்தியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவில் முன்னேற்றம், பரஸ்பர நலன்களில் உள்ள கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இரு நாட்டு தலைவர்களும் மதிப்பாய்வு செய்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா உள்பட மற்ற நாடுகளின் மீது அதிக வரிவிதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், உக்ரைன் அதிபருடம் மோடி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகத்தில் ஜிஎஸ்டி முறைகேடு: வரி ஏய்ப்பு 5 மடங்கு அதிகரிப்பு!

கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்யப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் 2024-25 நிதியாண்டில், ரூ. 39,577 கோடி சரக்கு மற்றும் ... மேலும் பார்க்க

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

இந்தியாவில் நடப்பு பருவகாலத்தில் பருவமழைப்பொழிவு இதுவரை இயல்பான அளவையொட்டியே பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் விவசாயத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்க... மேலும் பார்க்க

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க

தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க வேண்டும்: தில்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தில்லியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைக்க தில்லி அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் தெரு நாய்களால் ரேபீஸ் நோயால் பாதி... மேலும் பார்க்க