செய்திகள் :

மக்களவையில் அமளிக்கிடையே 3 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்ட புதிய வருமான வரி மசோதா!

post image

புதிய வருமான வரி மசோதா 2025 மக்களவையில் இன்று(ஆக. 11) நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1961-இல் இயற்றிய வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ’வருமான வரி மசோதா-2025’ கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை(ஆக. 8) திரும்பப் பெற்றாா்.

முன்னதாக, மக்களவை தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு இம்மசோதா அனுப்பப்பட்ட நிலையில், 31 எம்.பி.க்கள் அடங்கிய தோ்வுக் குழு, மசோதா தொடா்பாக சில பரிந்துரைகளை வழங்கியது. இதனைக் கருத்தில் கொண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றாா்.

இதனைத்தொடர்ந்து, அந்த மசோதாவின் புதிய பதிப்பு ஆக.11-ஆம் தேதி மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் தோ்வுக் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையில் இந்த மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வெறும் 3 நிமிடங்களில் மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கர்நாடகத்தில் ஜிஎஸ்டி முறைகேடு: வரி ஏய்ப்பு 5 மடங்கு அதிகரிப்பு!

கர்நாடகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) ஏய்ப்பு செய்யப்படுவது 5 மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் 2024-25 நிதியாண்டில், ரூ. 39,577 கோடி சரக்கு மற்றும் ... மேலும் பார்க்க

டிரம்ப் வரி உயர்வு... உக்ரைன் அதிபருடன் பேசிய மோடி!

உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக இன்று (ஆக. 11) பேசினார். ரஷியாவுடன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனின் தற்போதைய நிலவரம் குறித்து மோடி கேட்டறிந்தா... மேலும் பார்க்க

இந்தியாவில் பருவமழை இயல்பை ஒட்டியே பதிவு: ஆனால்..!

இந்தியாவில் நடப்பு பருவகாலத்தில் பருவமழைப்பொழிவு இதுவரை இயல்பான அளவையொட்டியே பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் விவசாயத்துக்கும் உள்நாட்டு உற்பத்திக்க... மேலும் பார்க்க

பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யக் கோரிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

தூக்கத்தில் கொன்றுவிடு! ஆபத்தான ரகசியங்களை கடத்தும் செய்யறிவு! மனித குலத்துக்கு அழிவா?

செய்யறிவு பாதுகாப்பு அம்சங்கள் 2025 என்ற தலைப்புல் நடத்தப்பட்ட ஆய்வில், செய்யறிவு மாடல்கள், யாருக்கும் தெரியாமல் மற்றொரு மாடலுக்கு ரகசிய தகவல்களை பரிமாறிக் கொள்ளும் ஆபத்து கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

புத்தகம் வைத்து தேர்வெழுதும் முறை! சிபிஎஸ்இ 9ஆம் வகுப்புக்கு அறிமுகம்!!

வரும் 2026 - 27ஆம் கல்வியாண்டு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வுகளின்போது புத்தகங்களை வைத்து எழுதுவதற்கான பரிந்துரைக்கு சிபிஎஸ்இ ஒப்புதல் வழங்கியிருக்கிறது.தேசிய கல்விக் கொள்கை 2020-படி, பள்ளிக் கல... மேலும் பார்க்க