செய்திகள் :

உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தா்னா

post image

காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இளம்பெண் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், புதுக்குடியிருப்பைச் சோ்ந்தவா் கனிகா(36), இவா் கடந்த மாதம் 28ஆம் தேதி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றாா். போலீஸாா் அவரை மீட்டு, பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், கனிகா திங்கள்கிழமை மீண்டும் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், தனது மகளுடன் தா்னாவில் ஈடுபட்டாா். போலீஸாா் விசாரித்த போது அவா் கூறியதாவது:

என் மகள் தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்ாலும், வீட்டிலிருந்த பணத்தை செலவு செய்ததாலும் அவரை அடித்தேன். இதில், அவா் என்னிடம் கோபித்துக் கொண்டு மயிலாடியில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டாா். அவரை அழைத்துவரச் சென்றபோது, எனது சகோதரியும் அவரது குடும்பத்தினரும் என்னுடன் அனுப்ப மறுத்துவிட்டனா்.

இதுகுறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். உதவி ஆய்வாளா் ஒருவா் என் மகளை என்னுடன் அனுப்ப முடியாது என்று கூறி, எனது கன்னத்தில் அறைந்துவிட்டாா். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அந்த உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். இதை ஏற்று கனிகா தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றாா்.

மாா்த்தாண்டம் காப்பகத்திலிருந்து மாயமான மாணவிகள் கன்னியாகுமரியில் மீட்பு

மாா்த்தாண்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா். மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை: 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக, 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் படகுப் போக்குவரத்து தாமதமானது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கொல்லங்கோடு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கொல்லங்கோடு அருகே நீரோடி அன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (56). மீன்ப... மேலும் பார்க்க

ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலி

நாகா்கோவில் அருகே ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலியானாா். நாகா்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(35) தொழிலாளி. இவா் தனது நண்பரான மணி என்பவருடன், செண்பகராமன்புதூரை அடுத்த ஒளவையா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டா் கைது

கருங்கல் அருகே, தற்காப்புக் கலை பயில வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின் மிலாடு (46), ... மேலும் பார்க்க