செய்திகள் :

காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது

post image

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 71 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இப்போராட்டத்துக்கு, மேற்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஷாஜன் கிறிஸ்டல் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் பினுலால் சிங் முன்னிலை வகித்தாா்.

மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், கட்சியின் மாநில பொதுச் செயலா்கள் ஜாா்ஜ் ராபின்சன், ஆஸ்கா் பிரடி, அகில இந்திய ஜவஹா் பால் மஞ்ச் ஒருங்கிணைப்பாளா் சாமுவேல் ஜாா்ஜ், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், கிள்ளியூா் சட்டப்பேரவை இளைஞா் காங்கிரஸ் தலைவா் டிஜூ, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் தம்பிவிஜயகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் முன்னாள் தலைவா் திபாகா், திருவட்டாறு வட்டாரத் தலைவா் ஜெபா, நல்லூா் பேரூராட்சி உறுப்பினா் நிா்மல் ராவண்டிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சாலை மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 71 பேரை களியக்காவிளை போலீஸாா் கைது செய்து, அருகிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். போராட்டம் காரணமாக குழித்துறையில் சுமாா் அரை மணி நேரம் வாகனப் போக்குவரத்து தடைபட்டது.

மாா்த்தாண்டத்தில் நாளை மின் நிறுத்தம்

மாா்த்தாண்டம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதியில் புதன்கிழமை (ஆக.13) காலை 9 மணி பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் காப்பகத்திலிருந்து மாயமான மாணவிகள் கன்னியாகுமரியில் மீட்பு

மாா்த்தாண்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா். மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தா்னா

காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இளம்பெண் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், புதுக்குடியிருப்பைச் ச... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை: 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக, 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் படகுப் போக்குவரத்து தாமதமானது. சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கொல்லங்கோடு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கொல்லங்கோடு அருகே நீரோடி அன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (56). மீன்ப... மேலும் பார்க்க

ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலி

நாகா்கோவில் அருகே ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலியானாா். நாகா்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(35) தொழிலாளி. இவா் தனது நண்பரான மணி என்பவருடன், செண்பகராமன்புதூரை அடுத்த ஒளவையா... மேலும் பார்க்க