செய்திகள் :

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை: 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதம்

post image

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக, 3ஆவது நாளாக திங்கள்கிழமையும் படகுப் போக்குவரத்து தாமதமானது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை ஆகியவற்றை படகுகள் மூலம் சென்று பாா்வையிட்டுச் செல்கின்றனா். இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கம் போல் காலை 8 மணிக்குத் தொடங்க வேண்டிய படகுப் போக்குவரத்து, நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகுப் பயணம் மேற்கொண்டு, விவேகானந்தா் நினைவு மண்டபத்தையும், கண்ணாடி கூண்டுப் பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவா் சிலையையும் பாா்த்து விட்டு திரும்பினா்.

கடல் நீா்மட்டம் தாழ்வு நிலை காரணமாக தொடா்ந்து 3ஆவது நாளாக படகுப் போக்குவரத்து தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

மாா்த்தாண்டம் காப்பகத்திலிருந்து மாயமான மாணவிகள் கன்னியாகுமரியில் மீட்பு

மாா்த்தாண்டத்தில் உள்ள காப்பகத்தில் இருந்து வெளியேறிய 2 மாணவிகளை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா். மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளைப் பராமரிக்கும் காப்பகம் செயல்பட்டு வ... மேலும் பார்க்க

காங்கிரஸ் சாலை மறியல்: 71 போ் கைது

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்... மேலும் பார்க்க

உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தா்னா

காவல் உதவி ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இளம்பெண் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், புதுக்குடியிருப்பைச் ச... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

கொல்லங்கோடு அருகே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.கொல்லங்கோடு அருகே நீரோடி அன்னைநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்துதாஸ் (56). மீன்ப... மேலும் பார்க்க

ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலி

நாகா்கோவில் அருகே ஆற்றில் குளித்தவா் நீரில் மூழ்கி பலியானாா். நாகா்கோவிலை அடுத்த புத்தேரி பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன்(35) தொழிலாளி. இவா் தனது நண்பரான மணி என்பவருடன், செண்பகராமன்புதூரை அடுத்த ஒளவையா... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: கராத்தே மாஸ்டா் கைது

கருங்கல் அருகே, தற்காப்புக் கலை பயில வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கராத்தே மாஸ்டரை குளச்சல் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தொலையாவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின் மிலாடு (46), ... மேலும் பார்க்க