மாா்த்தாண்டத்தில் நாளை மின் நிறுத்தம்
மாா்த்தாண்டம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அந்தப் பகுதியில் புதன்கிழமை (ஆக.13) காலை 9 மணி பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாா்த்தாண்டம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூா், வெட்டுவெந்நி உள்ளிட்ட இடங்களுக்கும் அதைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.