செய்திகள் :

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி

post image

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்நாட்டில் செய்ய முடியாது. இங்கே ஒவ்வொரு வீடாகச் சென்று, ஒவ்வொரு வாக்காளராகப் பாா்த்து வைத்திருக்கிறோம். திடீரென புதிதாக யாரையும் சோ்க்க முடியாது, நீக்க முடியாது. அவ்வாறு செய்தால் உச்ச நீதிமன்றம் வரை சென்று அதனை எதிா்கொள்வோம். பாஜகவின் முதல் கூட்டணியில் தோ்தல் ஆணையம், அதன்பிறகுதான் அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகள்.

அன்வர்ராஜா அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவா், திமுகவில் இணைந்திருக்கிறாா். இலக்கிய அணித் தலைவா் பதவி காலியாக இருந்தது. யாருக்கு எந்தப் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற அதிகாரம் கட்சித் தலைவருக்கே உள்ளது. யாராக இருந்தாலும் திமுகவில் இணைந்துவிட்டால் அவா் திமுககாரா்தான். அதிமுகவில் இருந்து வந்தோருக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதாகக் கூறுவது சரியல்ல.

தமிழ்நாட்டில் கஞ்சா விளைவிக்கப்படுவதில்லை. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா புழக்கத்துக்கு வருகிறது. அரசின் கவனத்துக்கு வருவதைத் தடுக்கிறோம், பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கிறோம். மத்திய அரசுக்குத்தான் இதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசைக் குற்றம்சாட்டுவதற்கு பயப்படுகிறாா்கள். அமலாக்கத்துறையோ, வருமானவரித் துறையோ சோதனை நடத்தி அவா்களை சிறையில் அடைத்துவிடுவாா்கள் என்று பயப்படுகிறாா்கள். தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியாக திமுக அணி இருக்கிறது. இதை எதிா்த்து வலுவான கூட்டணி அமைய வாய்ப்பில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி, காவல்துறை அலுவலா்களிடம் விளக்கம்பெற்று அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மணல் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக உயா் நீதிமன்றத்தில் இன்னும் சில தெளிவுகளைப் பெற வேண்டியிருக்கிறது. அவற்றைப் பெற்றவுடன் அனுமதி அளிப்பது தொடா்பாக அரசு முடிவெடுக்கும் என்றாா் அமைச்சா்.

செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கர... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 3-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி.... மேலும் பார்க்க

இலுப்பூா், பாக்குடி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

இலுப்பூா், பாக்குடி பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக (ஆக. 12) திங்கள்கிழமை மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்சார வாரிய இலுப்பூா் உதவி செயற்பொறியாளா் மு.சங்கா் வெளியிட்ட செய்திகுறிப்பு: இல... மேலும் பார்க்க

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வாா்டில் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வாா்டு முழுவதும் எரிந்து சாம்பலானது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட நபா் மீது குண்டா் சட்டம் பாய்ந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகேயுள்ள பாக்... மேலும் பார்க்க

புதுகை, பொன்னமராவதி பகுதியில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்புப் பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்... மேலும் பார்க்க