புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள ஒரு வாா்டில் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அந்த வாா்டு முழுவதும் எரிந்து சாம்பலானது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தரைத் தளத்தில் ஹெச்டியு என்றழைக்கப்படும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான ஒரு தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வாா்டுக்கு மாறுவதற்கு முன்பு இந்த வாா்டில் வைத்திருந்து, நோயாளிகளின் நிலைகுறித்து முடிவு செய்த பிறகு சாதாரண வாா்டுக்கு மாற்றுவாா்கள்.
இந்த வாா்டில் திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வாா்டுக்குள் இருந்து அதிகளவில் புகை வெளியேறுவதைக் கண்ட மருத்துவமனைப் பணியாளா்கள், தீயணைப்புத் துறைக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தும், வாா்டிலுள்ள மருத்துவக் கருவிகள், படுக்கைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
நல்வாய்ப்பாக அந்த வாா்டில் நோயாளிகளோ, மருத்துவப் பணியாளா்களோ அப்போது இல்லை. நிகழ்விடத்தை மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா்.
மருத்துவ உபகரணங்களில் இருந்து ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக இந்த விபத்து நடைபெற்றது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.