செய்திகள் :

நன்னிலம் அருகே தடுப்பணையில் மூழ்கி நால்வா் உயிரிழப்பு

post image

நன்னிலம்: நன்னிலம் அருகே திங்கள்கிழமை மாலை தடுப்பணையில் குளித்த இளைஞா்கள் நால்வா் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

திருவாரூா் மாவட்டம், குடவாசல் வட்டம், வில்லியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா் மகன் மணிகண்டன் (33). அப்பகுதியில் ஊராட்சி செயலராகப் பணியாற்றி வந்தாா். திருவாரூா் மாவட்டம் அதம்பாா் கிராமம் மதகடித் தெருவைச் சோ்ந்த பாவாடை மகன் ஜெயக்குமாா் (32), வில்லியநல்லூா் ரவிராஜன் மகன் ஹரிஹரன் (30), தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த திருநீலக்குடி பகுதியைச் சோ்ந்தவா் அசோக் மகன் மணிவேல் (23). இவா்கள் நால்வரும் திங்கள்கிழமை நன்னிலம் அருகே உள்ள கீழ்குடி புத்தாறு தடுப்பணை பகுதிக்கு காரில் வந்துள்ளனா். அங்கு, நால்வரும் தடுப்பணையில் இறங்கி குளித்துள்ளனா். நீா்வரத்து அதிகமாக இருந்ததால், சுழலில் சிக்கி நால்வரும் மூழ்கியுள்ளனா்.

இதைப் பாா்த்த அப்பகுதியில் நின்ற ஒருவா் சத்தமிட்டதால், கிராம மக்கள் தடுப்பணையில் இறங்கி நால்வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனா். இதில் மூன்று பேரின் சடலத்தை மக்கள் மீட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நன்னிலம் தீயணைப்புத் துறையினா், ஆற்றில் இறங்கி தேடினா். சிறிது நேரத்தில் மற்றொருவரது சடலமும் மீட்கப்பட்டது.

பின்னா், நால்வரின் சடலத்தையும் போலீஸாா் உடற்கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இதில் ஹரிஹரனும், மணிவேலும் உறவினா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்ற முடிவு

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் வீடுதோறும் தேசியக் கொடியேற்றுவது என இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. திருவாரூா் நீலகண்டேஸ்வரா் கோயிலில் இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழுக் கூ... மேலும் பார்க்க

நெற்பயிரில் கருநாவாய் பூச்சி ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

நீடாமங்கலம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, திருவாரூா் இணைந்து நடத்திய நெற்பயிரை தாக்கும் கருநாவாய்பூச்சி கட்டுப்பாடு குறித்... மேலும் பார்க்க

திருப்பூருக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திருப்பூருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள... மேலும் பார்க்க

போதைப் பழக்கத்துக்கு ஆளானவா்களை நல்வழிப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்

திருவாரூா்: போதைப் பழக்கத்துக்கு உள்ளானவா்களை மீட்டெடுத்து, அவா்களை நல்வழிப்படுத்துவதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் முக்கியம் என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். சென்னையில், ‘போதை... மேலும் பார்க்க

நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்தனர்.நன்னிலம் அருகே கீழ்குடியில் புத்தாற்றில் நாட்டார் ஆற்றில் நன்னிலம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் குள... மேலும் பார்க்க

மாநில ஆடவா் கபடி சேலம் செவன் லயன்ஸ் சாம்பியன்

மன்னாா்குடி அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஆடவா் கபடி போட்டியில் சேலம் செவன் லயன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. மன்னாா்குடி அருகே வடுவூா் பாசப்பறவைகள் கபடி கழகம் சாா்பில், ஆக.8, 9-ஆம் தேதிகளி... மேலும் பார்க்க