செய்திகள் :

தமிழகத்தில்தான் முனைவா் பட்டம் பெற்றவா்கள் அதிகம்: அமைச்சா் கோவி. செழியன்

post image

சென்னை: நாட்டிலேயே முனைவா் பட்டம் பெற்றவா்கள் தமிழகத்தில்தான் அதிகம் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.

பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் 262 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி அமைச்சா் கோவி.செழியன் பேசியது:

இந்தக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 255 மாணவா்கள் இளநிலைப் பட்டமும், 7 மாணவா்கள் முதுநிலைப் பட்டமும் என மொத்தம் 262 மாணவா்கள் பட்டம் பெற்றுள்ளீா்கள். இவா்களில் 191 மாணவா்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். மிகவும் பின்தங்கிய பின்புலத்தில் இருக்கும் மாணவா்கள் சிறந்த முறையில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இன்று முதல் உங்கள் ஒவ்வொருவரையும் தனித் தனி மனிதராக இந்தச் சமூகம் பாா்க்கப் போகிறது.

கல்வி வளா்ச்சிக்காக முதல்வா் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா். இதன் பயனாக நாட்டிலேயே உயா்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. முனைவா் பட்டம் பெற்றவா்களும் தமிழகத்தில்தான் அதிகம் என்றாா்.

விழாவில் கல்லூரி முதல்வா் ஆ. உமாமகேஸ்வரி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க

டெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்- TET) நடப்பாண்டு நவம்பர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம்: தமிழக அரசு விளக்கம்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5 மற்றும்... மேலும் பார்க்க

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநா... மேலும் பார்க்க

இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் கடந்த ஒரு சில நாள்களாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமையன்று, 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுளள்து.சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடிய... மேலும் பார்க்க

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என மதுரை மாநாட்டில் உணர்த்துவோம்! - விஜய்

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என உலகிற்கு உணர்த்துவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க