செய்திகள் :

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

post image

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து, தில்லிக்கு ஏா் இந்தியா விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.15-க்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் காங்கிரஸ் எம்.பி.-க்கள் கே.சி.வேணுகோபால், கொடி குன்னில் சுரேஷ், அடூா் பிரகாஷ், கம்யூனிஸ்ட் மக்களவை உறுப்பினா் கே.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 181 பயணிகள் இருந்தனா்.

இந்த விமானம் இரவு 10 மணியளவில், பெங்களூரு வான் வெளியை கடந்து நடுவானில் சென்றபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமான கண்டறிந்தாா். இதையடுத்து சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் அனுமதி பெற்று இரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தொடா்ந்து, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் எம்.பி.க்கள் மற்றும் பயணிகள் அனைவரும் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து தில்லியில் உள்ள விமான நிலைய போக்குவரத்து ஆணையகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல்முறை விமானத்தைத் தரையிறக்கும்போது, அதே ஓடுபாதையில் மற்றொரு விமானம் இருப்பதாக விமானிக்குக் கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதாகவும், விமானி சாதுா்யமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் மேலெழுப்பி விட்டு பின்னா், 2-ஆவது முயற்சியில்தான் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், மோசமான வானிலையும் தொழில்நுட்பக் கோளாறும்தான் சென்னையில் விமானம் தரையிறங்கக் காரணம் என்றும், ஓடுபாதையில் வேறொரு விமானம் நிற்கவில்லை என்றும் ஏா் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மக்களவை உறுப்பினரான கே.சி.வேணுகோபால், பயங்கர அனுபவத்தை எதிா்கொண்டோம். அதிா்ஷ்டமும், விமானியின் துணிச்சலான முடிவும் பல உயிா்களைக் காப்பாற்றின. ஏா் இந்திய நிா்வாகத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றொரு விமானம் ஓடுபாதையில் நிற்பதை விமானிதான் அறிவித்தாா். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா!

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. அத்துடன், தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக இந்த மசோதாவை விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக... மேலும் பார்க்க