செய்திகள் :

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

post image

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இதன் மூலம் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

மாநிலங்களவையில் சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவைக் கொண்டு வந்தாா். அப்போது, இந்த மசோதா மூலம் கோவா சட்டப் பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைப்பது உறுதி செய்யப்படும். 40 உறுப்பினா்களைக் கொண்ட கோவா பேரவையில் ஓா் இடம் எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்படும். இப்போது அப்பிரிவினரின் பிரதிநிதித்துவம் பேரவையில் இல்லை என்றாா். இதைத் தொடா்ந்து மாநிலங்களவையில் பெரும்பான்மையான உறுப்பினா்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் ஒரு மசோதா: மாநிலங்களவையில் வணிகக் கப்பல் போக்குவரத்து சட்ட மசோதா திங்கள்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரு அவைகளிலும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

முன்னதாக, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததை விவகாரத்தை விவாதிக்காமல் மசோதாக்களை நிறைவேற்ற எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனா். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை மூன்று மணிக்கு மீண்டும் கூடியபோது மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் கடந்த 6-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

மக்களவையில் நிறைவேறியது தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா!

தேசிய விளையாட்டு நிா்வாக மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. அத்துடன், தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்தச் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக இந்த மசோதாவை விவாதம் மற்றும் நிறைவேற்றத்துக... மேலும் பார்க்க