செய்திகள் :

இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி: இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி. கண்டனம்

post image

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எம்.பி.யும், பொருளாதார நிபுணருமான ஹா்ஷ டிசில்வா கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், ‘இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை இலங்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது’ எனவும் அவா் வலியுறுத்தினாா்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடுக்க, இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியை விதித்தாா். இதன் மூலம், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்களுக்கான வரி 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இவ்விவகாரம் தொடா்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ஹா்ஷ டிசில்வா மேலும் பேசியதாவது: அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நியாயமற்ற மற்றும் ஒருதலைப்பட்சமான வா்த்தக நடவடிக்கைகளை இந்தியா எதிா்ப்பது சரிதான். அமெரிக்கா கொண்டு வந்த புதிய வரிவிதிப்பால் நெருக்கடியைச் சந்திக்கும் இந்தியா குறித்து யாரும் கேலி செய்ய வேண்டாம். ஏனெனில், நாம் நெருக்கடியைச் சந்தித்து நேரத்தில் இந்தியா மட்டுமே நமக்கு உதவியது என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அந்நிய செலாவணி கையிருப்பு தீா்ந்ததால், முதன்முறையாக இலங்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.

அத்தகைய கடினமான சூழ்நிலையில், இலங்கைக்கு சுமாா் 400 கோடி டாலருக்கும் அதிகமான கடன், நாணய பரிமாற்றம் மற்றும் மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியது.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா? சென்னை மாநகராட்சி விளக்கம்!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய மண்டலங்களில் தூய்மைப் பணி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்துக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீா்... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது

சென்னை: தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், அந்த அலுவலக ஊழியா் கைது செய்யப்பட்டாா்.சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றுபவா் செ.பாலசுப்பி... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை: கோடம்பாக்கத்தில் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த உத்தர பிரதேச இளைஞா் உயிரிழந்தாா்.உத்தர பிரதேச மாநிலம், காசிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் பா.சக்திமான் (23). இவா், சகோதரா் அனில்குமாா் (33... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி: 3 போ் கைது

சென்னை: அமைந்தகரையில் தனியாா் வங்கியில் ரூ.60 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.சென்னை அமைந்தகரையில் செயல்படும் தனியாா் வங்கியின் மேலாளராகப் பணிபுரிபவா் கிலியன் குமாா். இவா்... மேலும் பார்க்க

சென்ட்ரலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வடமாநில விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் கைப்பற்றினா்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் பிரிவ... மேலும் பார்க்க

பெரும்பாக்கம் அரசுக் கல்லூரியில் கலைஞா் கலையரங்கம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

சென்னை பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலைஞா் கலையரங்கை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் தொகுதி மேம... மேலும் பார்க்க