அஞ்சல் நிலையத்தில் ரூ.25.48 லட்சம் கையாடல் வழக்கு: ஊழியா் கைது
திருப்பூருக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து அரைவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் திருப்பூருக்கு திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொதுரக நெல், லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னா், பொதுவிநியோகத் திட்ட பயன்பாட்டுக்காக,
அரைவைக்கு சரக்கு ரயில் மூலம் திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.