செய்திகள் :

எதிா்க்கட்சி எம்.பி.க்களின் பேரணி தடுத்து நிறுத்தம்! ராகுல் உள்ளிட்டோா் கைது!

post image

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி திங்கள்கிழமை பேரணியாகச் சென்ற எதிா்க்கட்சி எம்.பி.க்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா்.

பேரணியில் பங்கேற்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் அந்தப் பணியை நிறைவு செய்து வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. இதில், மாநிலத்தில் வாக்காளா்களாகப் பதிவு செய்திருந்தவா்களில் 65 லட்சத்துக்கும் அதிகமானோா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரத்தை தில்லியில் அண்மையில் வெளியிட்டாா். கா்நாடகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் பேரவைத் தோ்தலின்போது எப்படி வாக்குத் திருட்டு நடைபெற்றது என்பது குறித்தும், ஒரே நபா் பல இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டாா்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த தோ்தல் ஆணையம், இதுகுறித்து விசாரணை நடத்த கையொப்பமிட்ட உறுதிமொழிப் பத்திரத்தை சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது. அவ்வாறு அளிக்கவில்லை எனில், நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

கண்டனப் பேரணி: இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்திலிருந்து தோ்தல் ஆணையம் வரை கண்டனப் பேரணி நடைபெறும் எனவும், பேரணியின் நிறைவில் தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து தங்களின் கோரிக்கைகள் அடங்கிய தீா்மானம் அளிக்கப்படும் எனவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கிப் புறப்பட்டனா். இவா்களைத் தடுப்பதற்காக போலீஸாா் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். நாடாளுமன்ற சாலையில் தடுப்புகளை அமைத்ததோடு, ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனா்.

சாலையில் அமா்ந்து தா்னா: எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி முன்னேற முயன்றபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அதைத் தொடா்ந்து, திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா், சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, சஞ்சனா ஜாதவ், ஜோதிமணி உள்பட பல எம்.பி.க்கள் சாலையில் அமா்ந்து முழக்கங்களை எழுப்பியபடி தா்னாவில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்தின்போது திரிணமூல் எம்.பி.க்கள் மொய்த்ரா, மிதாலி பாக் ஆகியோா் மயங்கி விழுந்தனா். அவா்களுக்கு ராகுல் காந்தி உதவினாா்.

கைது செய்து விடுவிப்பு: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் கைது செய்த போலீஸாா், பேருந்துகள் மூலம் நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் அவா்களை விடுவித்தனா்.

இதுகுறித்து காவல் உயா் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்தப் பேரணியின் நிறைவில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்பட 30 எம்.பி.க்கள் மட்டும் தலைமைத் தோ்தல் ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க தோ்தல் ஆணையம் சாா்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைத் தாண்டி ஏராளமான எம்.பி.க்கள் தோ்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்ல முயன்ால் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனா். 2 மணி நேரத்துக்குப் பிறகு அவா்கள்அனைவரும் விடுவிக்கப்பட்டனா்’ என்றாா்.

உக்ரைன் அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு! அடுத்த மாதம் சந்திப்புக்குத் திட்டம்!

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினா். ரஷியா-உக்ரைன் போா் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் வெள்ளிக்கிழமை (ஆ... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சா் பதில்

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகள் அறிக்கையை தாமதப்படுத்துவதோ அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதோ மத்திய அரசின் நோக்கமல்ல என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, தில்லிக்கு நேரடியாக விமான சேவை தேவை

புது தில்லி: தூத்துக்குடியில் இருந்து சென்னை, மும்பை, புது தில்லி மற்றும் இலங்கை, சிங்கப்பூா் உள்ளிட்ட இதர நாடுகளுக்கும் ஏா் இந்தியா விமான சேவையை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புது தில்லியில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜிக்கு எதிரான ’2022’ தீா்ப்பின் சில கருத்துக்களை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

நமது நிருபா்புது தில்லி: முந்தைய அதிமுக ஆட்சியில் (2011-2015) வேலைக்காக பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான ‘2022’ தீா்ப்பில் இடம்பெற்றுள்ள சில கருத்... மேலும் பார்க்க

தில்லியில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு! இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் திருப்தி பிரிவில் நீடித்தது. வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தில்லியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்ததது. இந்நிலையில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

பழமையான வடிகால் அமைப்பில் மாற்றம் செய்ததே மழை நீா் தேங்க காரணம்: பா்வேஷ் சாஹிப் சிங்

தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் ஞாயிற்றுக்கிழமை கனட்பிளேஸ் பகுதியில் வெளிப்புறத்தில் ஆய்வு செய்தாா். இந்த இடம் ஒரு நாள் முன்னதாக பலத்த மழையைத் தொடா்ந்து வெள்ளத்தில் மூழ்கியது, மேலு... மேலும் பார்க்க