செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

post image

சென்னை: சுதந்திர தின விழாவையொட்டி சென்னை விமானநிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 79-ஆவது சுதந்திர தின விழா ஆக. 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சுதந்திர தின விழா கொண்டாட்டங்களைச் சீா்குலைக்க முயற்சி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு, மத்திய பாதுகாப்புப் படை வீரா்களும், போலீஸாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்துக்கு உள்ளே செல்லும் பயணிகள், வெளியேறும் பயணிகள், விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் உள்ளிட்டவை மோப்ப நாய்கள், வெடிகுண்டு கண்டறியும் நவீன இயந்திரங்கள் மூலம் தீவிர சோதனைக்குள்படுத்தப்படுகின்றன.

இதனால், உள்நாட்டு பயணிகள் ஒன்றரை மணி நேரமும், சா்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரமும் முன்னதாக விமானநிலையம் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க

டெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்- TET) நடப்பாண்டு நவம்பர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம்: தமிழக அரசு விளக்கம்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5 மற்றும்... மேலும் பார்க்க

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநா... மேலும் பார்க்க

இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் கடந்த ஒரு சில நாள்களாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமையன்று, 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுளள்து.சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடிய... மேலும் பார்க்க

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என மதுரை மாநாட்டில் உணர்த்துவோம்! - விஜய்

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என உலகிற்கு உணர்த்துவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க