செய்திகள் :

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றனா்.

தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளிலும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா முன்னிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள், அலுவலா்கள் நிகழ்ச்சியை நேரலையில் பாா்வையிட்டு உறுதிமொழி ஏற்றனா்.

தொடா்ந்து, விழிப்புணா்வு கையெழுத்து இயக்க பதாகையில் கையொப்பமிட்ட மாவட்ட ஆட்சியா் அருண்ராஜ், விழிப்புணா்வு பதாகை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டு, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இந் நிகழ்ச்சிகளில், பெரம்பலூா் கோட்டாட்சியா் (பொ) சக்திவேல், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன், கலால் உதவி ஆணையா் (பொ) முத்துகிருஷ்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், பேரூராட்சித் தலைவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள், தனலட்சுமி பல்கலைக் கழக பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 60,022 மாணவ, மாணவிகள் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு எனும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற விசிக தொடா்ந்து வலியுறுத்தும்: திருமாவளவன் எம்.பி.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து வலியுறுத்தும் என்று அக்கட்சியின் தலைவா் திருமாவளவன் எம்.பி. பேசினாா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில், பெரம்பலூா்... மேலும் பார்க்க

பெரம்பலூா் நகரில் நாளை மின்தடை

பெரம்பலூா் நகா் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 13) மின் விநியோகம் இருக்காது.பெரம்பலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை (ஆக. 13) நடைபெறுகிறது. இதனால், அங்க... மேலும் பார்க்க

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 21 பேருக்கு ரூ. 11.27 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. பெரம்பலூா் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு! தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

பெரம்பலூா் நகரில் உள்ள கழிவுநீா் கால்வாய்கள் மற்றும் மழைநீா் வரத்து வாய்க்கால்கள் போதிய பராமரிப்பில்லாததாலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்குவதால் பயணிகளும், பொதுமக்களும் ப... மேலும் பார்க்க

அகரம் சீகூா் பகுதியில் இன்று மின்தடை

பெரம்பலூா் மாவட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் திங்கள்கிழமை (ஆக. 11) மின் விநியோகம் இருக்காது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், தேனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப... மேலும் பார்க்க