செய்திகள் :

காஸாவில் 2 ஆண்டுகளில் 238 பத்திரிகையாளர்கள் கொலை!

post image

கடந்த 2023 முதல் காஸாவில் 238 பத்திரிகையாளர்களை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காஸா குற்றம் சாட்டியுள்ளது.

காஸா நகரத்திற்கருகே உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் இன்று (ஆக. 11) கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் என்ற குண்டு துளைக்காத கவசத்தை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இது குறித்துப் பேசிய ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாஹாயி, இஸ்ரேல் ராணுவத்தால் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதை உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், இஸ்ரேலின் விதிமீறல்களால், போர் குற்றங்களை கேள்வி கேட்கும் பத்திரிகையாளர் என்ற கவசத்திற்கு மதிப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், பத்திரிகை துறையில் ரத்தம் உறைந்து கிடப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தில் கடுமையான கண்டனம் என்பது கூட குறைந்தபட்ச நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்ட பாஹாயி, உலக நாடுகள் உடனடியாக தலையிட்டு கொடூரமான இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறினார்.

போர் தொடங்கப்பட்ட 2023 அக்டோபர் 7 முதல் இதுவரை 238 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - காஸா இடையிலான போரில் 186 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | அல்-ஜசீரா செய்தியாளர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

Since October 2023, Israel has killed 238 journalists in Gaza, in the deadliest conflict ever recorded for reporters

காஸா: பத்திரிகையாளர்கள் பலி; கேள்விக்குறியான மக்களின் உயிர்! குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்திய இஸ்ரேல்

காஸாவில் குண்டுவீச்சு தாக்குதல்களை இஸ்ரேல் ம்ீண்டும் முனைப்புடன் நடத்தியுள்ளதால் ஏராளமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். காஸாவில் தாக்குதல் திட்டத்தை விரைவுபடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற... மேலும் பார்க்க

அல்-ஜசீரா செய்தியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 6 பேர் பலி!

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர்களைகுறிவைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் பத்திரிகையாளர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந... மேலும் பார்க்க

இந்த நாடு, 2025க்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும்! எலான் மஸ்க் எச்சரிக்கை

ஜப்பான் நாட்டில் மக்கள் தொகை அண்மை ஆண்டுகளில் வெகுவாக சரிந்து வரும் நிலையில், 2025 இறுதிக்குள் 10 லட்சம் பேரை இழந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.அமெரிக்க தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலா... மேலும் பார்க்க

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

காஸா மீது, இஸ்ரேல் நடத்திய மிகக் கோரமான தாக்குதலில், செய்தியாளர்களின் முகாமில் இருந்த அனஸ் அல்-ஷரீஃப் உள்பட 5 அல் ஜஸீரா செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டனர்.28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அ... மேலும் பார்க்க

புதின் - டிரம்ப் பேச்சு: ரஷியா, உக்ரைன், அமெரிக்கா நிலைப்பாடு என்ன?

உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பாக ரஷிய அதிபா் புதினுடன் அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரஷியா, உக்ரைன், அமெரிக்கா மூன்று நாடுகளும... மேலும் பார்க்க

ஆப்கனில் ஐ.நா. பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்: தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தானில் தங்களின் அமைப்பில் பணிபுரியும் பெண் ஊழியா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, இதுதொடா்பாக தலிபான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்... மேலும் பார்க்க