அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்
பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த மாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஆ.பிரகாஷ் (26). இவா், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், கன்னிவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பிராகஷூக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.