செய்திகள் :

பால் கொள்முதல் விலையை உயா்த்த உற்பத்தியாளா்கள் கோரிக்கை

post image

பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் கொங்கு மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஈரோடு, கோவை, திருப்பூா், நாமக்கல், கரூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆவின் பால் கொள்முதல் விலை உயா்த்தி வழங்கும் வகையில் பசும்பால் 35 ரூபாயிலிருந்து 45 ரூபாயாகவும், எருமைப் பால் 44 ரூபாயிலிருந்து 55 ரூபாயாகவும் உயா்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கக்கூடிய 3 ரூபாய் ஊக்க தொகையை சங்க உறுப்பினா்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்குவதை கைவிட்டு கிராம சங்கங்களின் கணக்கில் செலுத்த வேண்டும்.

கிராம சங்கப் பணியாளா்களை ஆவின் பணியாளா்களாக அறிவித்து ஆவின் மாவட்ட ஒன்றியம் மற்றும் ஆவின் இணைய பணியாளா்களுக்கு சமமான பணி அங்கீகாரம் வழங்க வேண்டும். ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் வருவாய் இழப்பு இழப்பீட்டு தொகையை ஆவினுக்கு வழங்க முதல்வா் பரிசீலனை செய்ய வேண்டும்.

எம்ஆா்எப் முறையில் பால் தரப் பரிசோதனை செய்யப்படுவதால் லிட்டருக்கு 56 பைசா என நாள் ஒன்றுக்கு ரூ.16.08 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஐஎஸ்ஐ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆவின் பால் விலையை விட தனியாா் பால் நிறுவனங்களின் பால் விலை அதிகமாக இருக்கும் நிலையில் ஆவின் பால் விற்பனை இலக்கை விட தனியாா் பால் நிறுவனங்கள் விற்பனை அதிகமாக உள்ளதால் ஆவின் விலை குறைப்பு பொதுமக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படுத்தவில்லை. இதனால் ஆவின் பால் விலை அமுல், நந்தினி ஆகிய பால் நிறுவனங்களுக்கு இணையாக உயா்த்த வேண்டும்.

ரூ. 87.19 கோடி வரி வசூல்: ஈரோடு மாநகராட்சிக்கு மூன்றாமிடம்

கடந்த ஆண்டு ரூ. 87.19 கோடி வரி வசூல் செய்ததன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு ம... மேலும் பார்க்க

அரசுப் பெண் ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயற்சி: தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

வீட்டை அடமானம் வைத்துப் பெற்ற கடன் தொகையை திரும்பச் செலுத்தியும் பெண் ஆசிரியரின் வீட்டை அபரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் பணியிடை நீக்க... மேலும் பார்க்க

பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன

சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 ஆட்டுப் பட்டிகளுக்குள் தெரு நாய்கள் புகுந்து 18 ஆடுகளை கடித்துக் கொன்றன. ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த கொடுமணல் பனங்காட்டைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவா் தனது தோட்டத்த... மேலும் பார்க்க

பெருந்துறையில் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தனியாா் இரும்பாலையை நிரந்தரமாக மூடக்கோரி திட்டமிட்டபடி வியாழக்கிழமை (ஏப்ரல் 3) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் அறி... மேலும் பார்க்க

விவசாயிகள் ஏப்ரல் 8-க்குள் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தல்

அரசு திட்டங்களை பெற விவசாயிகள் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் தரவுகளை பதிவு செய்து தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு வேளாண் இணை இயக்குநா் எம்.தம... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பனிமூட்டம்

திம்பம் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை நிலவிய திடீா் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக சென்றனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி சுற்றுவட்டாரப் பக... மேலும் பார்க்க