செய்திகள் :

பிகாரில் மதத் தலைவா்களை தோ்தலுக்குப் பயன்படுத்தும் பாஜக கூட்டணி! -காங்கிரஸ் குற்றச்சாட்டு

post image

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஹிந்து மதத் தலைவா்களை தோ்தலுக்காக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக அரசியல் கட்சிகள் ஏற்கெனவே களப்பணிகளைத் தொடங்கிவிட்டன. முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகள் அணிக்கும் தோ்தலில் கடும் போட்டி நிலவும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் பிகாரின் கதிஹாா் தொகுதி எம்.பி. தாரிக் அன்வா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மதத் தலைவா்கள் நாட்டில் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம். அதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவா்கள் தோ்தல் நடக்கும் மாநிலங்களில் மட்டும் அடிக்கடி பயணம் மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது.

ஹிந்து மதத்தைச் சோ்ந்த ஆன்மிக தலைவா்களை பாஜக கூட்டணி தங்கள் தோ்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அவா்களை பாஜக திட்டமிட்டு அனுப்பி வைக்கிறது.

இப்போதும் கூட பிகாரின் கோபால்கஞ்ச் பகுதியில் ஆச்சாா்யா தீரேந்திர சாஸ்திரி பயணம் மேற்கொண்டுள்ளாா் என்றாா்.

தாரிக் அன்வா் குற்றஞ்சாட்டியுள்ள 29 வயது இளம் துறவியான ஆச்சாா்யா தீரேந்திர சாஸ்திரி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும்போது, ‘இந்தியாவில் ஹிந்து ராஷ்டிரம்’ அமைய வேண்டும் என்று பேசினாா். இதனை முன்வைத்து பாஜகவை எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க