செய்திகள் :

பிஜு ஜனதா தளம் முன்னாள் எம்.பி.யுடன் திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா திருமணம்

post image

பிஜு ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்குரைஞரமான பினாகி மிஸ்ராவும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் ஜொ்மனியில் திருமணம் செய்துகொண்டனா்.

மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடா்ந்து 2-ஆவது முறையாக எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹுவா மொய்த்ரா (50), முதலீட்டு வங்கியாளராக வாழ்க்கையைத் தொடங்கினாா். பின்னா், இளைஞா் காங்கிரஸில் சோ்ந்து அரசியலில் நுழைந்தாா். கடந்த 2010-ஆம் ஆண்டு, திரிணமூல் காங்கிரஸில் ஐக்கியமாகி எம்எல்ஏவாகவும் இருந்தாா்.

ஒடிஸாவில் எதிா்க்கட்சியான பிஜு ஜனதா தளத்தின் தலைவரான பினாகி மிஸ்ரா(65), உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் ஆவாா். ஒடிஸாவின் புரி தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தோ்வாகியுள்ளாா்.

இந்நிலையில், இவா்கள் இருவரின் திருமணம் ஜொ்மனியில் கடந்த மே 30-ஆம் தேதி நடைபெற்ாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.

மஹுவா மொய்த்ராவுக்கு சக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சயோனி கோஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தாா்.

இந்நிலையில், திருமணச் செய்தியை உறுதி செய்யும் விதமாக, கணவா் பினாகி மிஸ்ராவுடன் கேக் வெட்டும் புகைப்படமொன்றைப் பகிா்ந்து திருமண வாழ்த்துகளுக்கு நன்றி கூறினாா் மஹுவா மொய்த்ரா.

உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!

வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார். இந்த சம்பவம்... மேலும் பார்க்க

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது

ஜார்க்கண்டில் மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலம், சான்ஹோவில் உள்ள கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த... மேலும் பார்க்க

அம்பானி படித்த பல்கலை.க்கு ரூ.151 கோடி நன்கொடை!

மும்பையில் ஐசிடி பல்கலைக் கழகத்துக்கு ரூ. 151 கோடி நன்கொடை அளிப்பதாக தொழிலதிபர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, 1970-களி... மேலும் பார்க்க

நிலச்சரிவால் சாலை துண்டிப்பு: வடக்கு சிக்கிமில் இருந்து 76 வீரர்கள் விமானம் மூலம் மீட்பு

வடக்கு சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் 76 ராணுவ வீரர்கள் விமானம் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். மொத்தமாக 76 ராணுவ வீரர்கள் மூன்று எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் விமா... மேலும் பார்க்க