செய்திகள் :

பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!

post image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 6) திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பகல் 12.45 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம், பூஜை செய்யவுள்ளார்.

இதனால், ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 8 முதல் பிற்பகல் 1 மணி வரை தரிசனத்துக்கு அனுமதி இல்லை எனவும் இன்று பிற்பகல் 3.30 முதல் தரிசனம் செய்யவும் தீர்த்தத்தில் நீராடவும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரதமா் வருகையை முன்னிட்டு, காவல் துறை உயா் அதிகாரிகள் தலைமையில் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மண்டபம் முதல் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வரை 20 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மீன் பிடிக்கத் தடை: பிரதமரின் வருகையை முன்னிட்டு, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளில் மீனவா்கள் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... நல்லதைச் சொல்வது தப்பா?

குமரி அனந்தன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்ன... மேலும் பார்க்க

காங்கிரஸ் பேரியத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன்! - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் பேரியத்துக்கு தன்னை ஒப்படைத்தவர் குமரி ஆனந்தன் என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னை... மேலும் பார்க்க

மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா: தமிழிசை உருக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவா் குமரி அனந்தன் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:15 மணியளவில் காலமானாா்.வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக, செ... மேலும் பார்க்க

ஆரியம் குணப்பெயா்; திராவிடம் இடப்பெயா்! நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன்

சென்னை: ஆரியம் என்பது குணப்பெயா்; திராவிடம் என்பது இடப்பெயா்; இரண்டையும் இணைத்துப் பேசுவது புரிதலின்மை என நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் தெரிவித்தாா்.தினமணி ஆசிரியா் உரைப் பக்கக் கட்டுரையாளரும் எழுத்தாளர... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை

சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக, அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா். தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: டாஸ்மாக் வழக்கு விவகாரம் தொடா்பாக தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் சோதன... மேலும் பார்க்க