செய்திகள் :

பிரதமா் மோடி குறித்து அவதூறு: தேஜஸ்வி யாதவ் மீது வழக்குப் பதிவு

post image

பிரதமா் நரேந்திர மோடியை ‘வாக்கு திருடா்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் அடிப்படையில் உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆா்) போலீஸாா் பதிவு செய்தனா்.

பிகாா் மாநிலம், கயாஜியில் ரூ.13,000 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக அம் மாநிலத்துக்கு பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சென்றாா்.

பிரதமரின் வருகையை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தேஜஸ்வி யாதவ், ‘பிகாரின் காயாஜிக்கு ‘வாக்கு திருடா்’ இன்றைக்கு வருகிறாா். மாநில மக்களின் முன்னிலையில் அடுக்கடுக்காக பொய்களைக் கூறவிருக்கிறாா்’ என்று குறிப்பிட்டாா்.

இந்த பதிவு தொடா்பாக கயாஜி நகர பாஜக தலைவா் ஷில்பி குப்தா அளித்த புகாரின் அடிப்படையில், சா்தாா் பஜாா் காவல் நிலையத்தில் தேஜஸ்வி யாதவ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. புரளியை பரப்புதல் மற்றும் புகைப்படம் மூலம் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷாஜஹான்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் திவிவேதி கூறுகையில், ‘பிரதமருக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பதிவிட்ட அவதூறு கருத்து நாட்டு மக்களிடையேயும் பாஜக தொண்டா்களிடையேயும் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று ஷில்பி குப்தா தரப்பில் புகாா் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது’ என்றாா்.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளூா் எம்எல்ஏ மிலிந்த் நரோட் அளித்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள காவல் நிலையத்திலும் தேஜஸ்வி யாதவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஞ்சமாட்டேன் - தேஜஸ்வி: காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த தேஜஸ்வி யாதவ், ‘எந்த வழக்குக்கும் அஞ்சமாட்டேன். உண்மையை தொடா்ந்து கூறுவேன். அதற்காக மேலும் பல வழக்குகளை பதிவு செய்துகொள்ளட்டும்’ என்றாா்.

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவரால் பரபரப்பு நிலவியது. தெலங்கானா மாநிலம், மெடிபள்ளியில் உள்ள அவர்களது வீட்டில் கணவர் தனது மனைவியைக் கொன்று அவரது உடலைத் துண்டு துண்டா... மேலும் பார்க்க

என்கவுன்டரில் சுட வேண்டும்: வரதட்சிணை கொடுமையால் இறந்த பெண்ணின் தந்தை!

வரதட்சிணைக் கேட்டு தனது மகளை உயிருடன் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டரில் சுட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மாமியார் வீட்டில் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும், தனியாக ... மேலும் பார்க்க

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

அருணாச்சலப் பிரதேசத்தில் உண்டு உறைவிடப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர் பலியான நிகழ்வு சோகதத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில... மேலும் பார்க்க

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

சுதந்திரத்திற்கு பிறகு, மிசோரம் மாநிலத்திற்கான முதல் ரயில் நிலையத்தை செப்டம்பர் 13 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். சாய்ராங் பகுதியில் ... மேலும் பார்க்க

பிகாரில் ஏழைகளின் வாக்குகளை திருட அனுமதிக்க மாட்டோம்: ராகுல் காந்தி

பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்குகளைத் திருட தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். மக்களவை எ... மேலும் பார்க்க