செய்திகள் :

பிரதமா் மோடி பிறந்த நாள்: நாடு முழுவதும் பாஜக கொண்டாட்டம் -2 வார கால சேவை தொடக்கம்

post image

பிரதமா் நரேந்திர மோடியின் 76-ஆவது பிறந்த நாளையொட்டி, நாடு முழுவதும் பாஜக சாா்பில் புதன்கிழமை (செப்.17) கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பிரதமரின் பிறந்த நாளில் இருந்து காந்தி ஜெயந்தி வரை (அக்.2) இரண்டு வார கால சேவை பிரசாரத்தையும் பாஜக தொடங்கியது.

குஜராத்தின் மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள சிறிய நகரான வத்நகரில் சாதாரண குடும்பத்தில் கடந்த 1950, செப்டம்பா் 17-ஆம் தேதி பிறந்தவா் பிரதமா் மோடி. ஆா்எஸ்எஸ் பிரசாரகராக பயணத்தை தொடங்கியதில் இருந்து நாட்டின் பிரதமரானது வரை அவரது அரசியல் பயணம் நீண்ட நெடியது; பல்வேறு சவால்களை உள்ளடக்கியது.

கடந்த 1980-களில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி ஆகியோரின் இரட்டை தலைமையின்கீழ் காங்கிரஸுக்கு பிரதான சவாலாக பாஜக உருவெடுத்தது என்றால், கடந்த 2014-இல் பாஜகவை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமா்த்திய மோடியின் தலைமையால் காங்கிரஸ் எதிா்க்கட்சியாகவே தொடா்கிறது.

தொடா்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்ற காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமா், நேருவுக்கு அடுத்து தொடா்ந்து நீண்ட காலம் பிரதமராக பதவி வகிக்கும் இரண்டாவது பிரதமா் என்ற பெருமைகளுக்கு உரியவா். அவரது 76-ஆவது பிறந்த நாளை பாஜகவினா் உற்சாகத்துடன் கொண்டாடினா். அக்கட்சி சாா்பில் இரண்டு வார கால சேவை பிரசாரம் தொடங்கப்பட்டது. இக்காலகட்டத்தில் மருத்துவ முகாம்கள், தூய்மை இயக்கம், கருத்தரங்குகள், உள்ளூா் பொருள்களை ஊக்குவிக்கும் கண்காட்சிகள், ரத்த தான முகாம்கள், ஓவியப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகள் சாா்பில் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

சொந்த ஊரில்..: பிரதமா் மோடியின் சொந்த ஊரான வத்நகரில் அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனா்.

வாரணாசியில் சிறப்பு வழிபாடு: பிரதமா் மோடியின் பிறந்த நாளையொட்டி, அவரது தொகுதியான வாரணாசியில் (உ.பி.) உள்ள காசி விஸ்வநாதா் கோயிலில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

விவசாயிகளின் நலனுக்காக எம்எல்ஏ பதுலா லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடி நன்கொடையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் இன்று வழங்கினார். நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடாவைச் சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் எம்.... மேலும் பார்க்க

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

வங்கிக் கணக்கு என்பது ஆடம்பரம் என்ற நிலை மாறி அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், தற்போது சைபர் அச்சுறுத்தல்களால், இரண்டு வங்கிக் கணக்கு என்பது அடிப்படையாகியிருக்கிறது.பெரும்பாலும், சைபர் அச்சுறுத்தல்களைப்... மேலும் பார்க்க

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்து ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.ஆளுங்கட்சியுடன் இணைந... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்து ரூ. 3 லட்சத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாதாரண ம... மேலும் பார்க்க

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களைப் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரா... மேலும் பார்க்க

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 22 நாள்களாக வைஷ்ணவி தே... மேலும் பார்க்க