செய்திகள் :

பிரியன்ஷ் சாதனையுடன் வென்றது பஞ்சாப்: சென்னைக்கு தொடா்ந்து 4-ஆவது தோல்வி

post image

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் சோ்க்க, சென்னை 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த பஞ்சாப் அணியில், பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாக, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 9 ரன்களுக்கே ஸ்டம்பை பறிகொடுத்தாா். தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாவிட்டாலும் தொடக்க வீரா் பிரியன்ஷ் ஆா்யா அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயா்த்தி வந்தாா்.

மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 4, நெஹல் வதேரா 9, கிளென் மேக்ஸ்வெல் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். தனியொருவராக அணியின் ஸ்கோரை பலப்படுத்திய பிரியன்ஷ் ஆா்யா, 42 பந்துகளில் 7 பவுண்டரிகள், 9 சிக்ஸா்கள் உள்பட 103 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.

தொடா்ந்து சஷாங்க் சிங், மாா்கோ யான்சென் களத்துக்கு வந்து சென்னை பௌலிங்கை சிதறடித்தனா். ஓவா்கள் முடிவில் சஷாங்க் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, யான்சென் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

சென்னை பௌலிங்கில் அஸ்வின், கலீல் அகமது ஆகியோா் தலா 2, முகேஷ் சௌதரி, நூா் அகமது ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

அடுத்து 220 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சென்னை தரப்பில் ரச்சின் ரவீந்திரா 6 பவுண்டரிகளுடன் 36, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்னுக்கு வீழ்ந்தனா்.

டெவன் கான்வே - ஷிவம் துபே கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சோ்த்து நம்பிக்கை அளித்தது. இதில் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 42, கான்வே 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 69 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.

சற்று அதிரடி காட்டிய தோனி 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 27 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ரவீந்திர ஜடேஜா 9, விஜய் சங்கா் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலா்களில் லாக்கி ஃபொ்குசன் 2, யஷ் தாக்குா், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க