செய்திகள் :

பிரியாணியும் பொரிச்ச கோழியும்.. சிறுவன் ஆசை நிறைவேறியது! கேரள அங்கன்வாடி மெனு மாற்றம்!!

post image

திருவனந்தபுரம்: குழந்தைகள் ஒரு விஷயத்தை ஆசைப்பட்டு கேட்கும் அழகே அழகு. அதுவும் உணவுபொருளாக இருந்துவிட்டால் தனி அழகுதான். அப்படித்தான், கேரள அங்கன்வாடி மைய சிறுவன் பிரியாணியும், பொரிச்ச கோழியும் கேட்ட விடியோவும் அமைந்திருந்தது.

ஏற்கனவே தமிழகத்தில் எனக்கு பசிக்கும்ல.. என சிறுவன் கூறும் விடியோ எவ்வாறு வைரலாகியிருந்ததோ அதுபோல, அங்கன்வாடி மையத்தில் உப்புமா சாப்பிட்டுக் கொண்டே, அங்கன்வாடிகளில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி கொடுக்கலாமே என்று சிறுவன் கேட்பதும், என்ன வேண்டும் என்று அங்கன்வாடி ஊழியர் கேட்டதும், அந்தக் குழந்தையும் மிக அழகாக பிரியாணியும், பொரிச்ச கோழியும் உப்புமாவுக்கு பதிலாக வேண்டும் என்று சொல்லும் விடியோ வைரலாகியிருந்தது.

இந்த விடியோ வைரலாகி 3 மாத காலத்தில், உண்மையிலேயே அங்கன்வாடி மையங்களின் உணவு மெனுவில், பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விடியோ உலகம் முழுவதும் சென்ற நிலையில், அது கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணிலும் பட்டிருக்கிறது.

கேரள சிறுவனின் விடியோவால் அங்கன்வாடி மெனுவில் மாற்றம் செய்யப்பட்டு, முட்டை பிரியாணி, புலாவ், பருப்புப் பாயாசம், சோயா கரி, தானிய லட்டு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி குழந்தையின் மழலைப் பேச்சுக்கு தற்போது வாழ்த்துகளும் பாராட்டுகளும், நன்றிகளும் குவிந்து வருகிறது. அது மட்டுமா, குழந்தையின் கோரிக்கையை ஏற்று மெனுவில் மாற்றம் கொண்டு வந்த கேரள அரசுக்கும்தான்.

ஏற்கனவே அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சாதாரண உப்புமா போன்ற உணவுகளை மாற்றிவிட்டு, ருசியான அதே வேளையில் உடலுக்கு சத்தான உணவுகளைக் கொண்டு வரும் திட்டத்தை வீணா ஜார்ஜ் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற உணவுகள் அங்கன்வாடி மையங்களில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறுகிறார்.

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற பய... மேலும் பார்க்க

2 மாநிலங்களால் தேடப்பட்ட நக்சல் தலைவர் சத்தீஸ்கரில் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களின் மூத்த தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தின் இந்திரவதி தேசியப் பூங்காவில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் சிறப்பு அதிரடி படை,... மேலும் பார்க்க

கரோனா பரவல்: ஒடிசாவில் புதியதாக 7 பேருக்கு பாதிப்பு!

ஒடிசா மாநிலத்தில் புதியதாக 7 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,000-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், ஒடிசா மாந... மேலும் பார்க்க

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ‘ஸ்டார் லிங்க்’ சேவை! உரிமம் வழங்கியது மத்திய அரசு!

டெஸ்லா நிறுவனரும் அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க்கின், செயற்கைக் கோள் இணைய சேவை வழங்கும் ‘ஸ்டார் லிங்க்’ நிறுவனத்துக்கு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்... மேலும் பார்க்க

ஜி7 மாநாட்டுக்கு அழைப்பு! பிரதமர் மோடியே வெளியிட்ட தகவல்

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 அமைப்பு, இந்த நாடுகளிடையேயான ... மேலும் பார்க்க

தில்லி முதல்வருக்கு கொலை மிரட்டல்: போலீஸ் விசாரணை

தில்லி முதல்வர் ரேகா குப்தாவை குறிவைத்து வந்த மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து தில்லி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.காஜியாபாத் காவல் உதவி ஆணையர் ரித்தேஷ் திரிபாதி கூறுகையில், ஜூன் 5ஆம் தேதி... மேலும் பார்க்க