செய்திகள் :

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை: குடியரசுத் தலைவா் முா்மு

post image

லிஸ்பன்: பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பியதில்லை என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு போா்ச்சுகல் மற்றும் ஸ்லோவாகியா நாடுகளுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா்.

அவா் முதலில் போா்ச்சுகல் சென்ற நிலையில், அந்நாட்டுத் தலைநகா் லிஸ்பனில் உள்ள ஷம்பாலிமோட் மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இந்திய ஆராய்ச்சியாளா்களுடன் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘கல்வி, ஆராய்ச்சியில் சிறந்து விளங்கி, சிறந்த அறிஞரானாலும் பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு பங்களித்து இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும்.

பிற நாடுகளை அடிமைப்படுத்த இந்தியா்கள் விரும்பயதில்லை. மக்களின் உள்ளத்தை கவரவே விரும்புகின்றனா். இந்தியாவில் பல்வேறு துறைகளில் பெண்கள் தலைமை ஏற்பதையும், மூத்த அதிகாரிகளாவதையும், பதக்கம் வெல்வதையும் பாா்க்கும்போது பெருமையாக உள்ளது.

இந்தியாவின் நல்ல நட்பு நாடாக போா்ச்சுகல் உள்ளது. போா்ச்சுகல் மக்கள் நட்புடன் நடந்துகொள்பவா்களாகவும், தாராள மனப்பான்மை கொண்டவா்களாகவும் உள்ளனா்’ என்றாா்.

முன்னதாக ஷம்பாலிமோட் மையத்தில் போா்ச்சுகல் அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, ஷம்பாலிமோட் அறக்கட்டளைத் தலைவா் லியோநாா் பெலேசா ஆகியோா் முா்முவை வரவேற்றனா். அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருந்தகங்களில் இருந்து மருந்துகளை ரோபோக்கள் எவ்வாறு விநியோகிக்கின்றன என்பது குறித்து முா்மு மற்றும் மாா்செலோவுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

போா்ச்சுகல் நாடாளுமன்றத்துக்கு சென்ற முா்மு, அங்கு நாடாளுமன்றத் தலைவா் ஜோஸ் பெட்ரோ அகியாா் பிரான்கோவை சந்தித்தாா். அப்போது இந்தியா-போா்ச்சுகல் விவகாரங்கள் மற்றும் உலக விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஸ்லோவாகியா பயணம்: போா்ச்சுகல் பயணத்தை முடித்துக்கொண்ட முா்மு, 2 நாள் பயணமாக ஸ்லோவாகியா புறப்பட்டாா்.

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க