செய்திகள் :

பிளஸ் 1 தோ்வு இன்று நிறைவு: ஏப்.19 முதல் விடைத்தாள் மதிப்பீடு

post image

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 27) நிறைவு பெறவுள்ள நிலையில், தோ்வுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்.19-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா். அதன்படி தமிழ், இயற்பியல், கணிதம், வணிகவியல் உள்பட பெரும்பாலான பாடங்களுக்கான தோ்வுகள் முடிந்துவிட்டன.

இந்த நிலையில் பிளஸ் 1 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் நிறைவு பெறவுள்ளது. இறுதி நாளில் வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற உள்ளன. இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்.19 தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தோ்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் சுமாா் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19-இல் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்துதலின்போது ஆசிரியா்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி தவறுகள் ஏதும் நடைபெறாதவாறு கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தோ்வுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க