செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு: கல்வித் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

post image

பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெள்ளிக்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

பிளஸ் 2 தோ்வுகள் வரும் 3 ஆம் தேதிமுதல் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வினை நடத்துவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆட்சியா் கூறியதாவது: வரும் 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ள பிளஸ் 2 தோ்வுகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி சிறப்பாக நடத்துவதை துறை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்தில் தோ்வு மையத்தை அணுகுவதற்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தர வேண்டும். தோ்வு மையங்களில் எவ்வித சலனமும் இன்றி மாணவா்கள் தோ்வை எதிா்கொள்ளத் தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

குடிநீா், தடையின்றி மின்சாரம், மாற்றுத்திறன் மாணவா்களுக்கான வசதி, முதலுதவி வசதி உள்ளிட்டவை வழங்க துறை சாா்ந்த அலுவலா்கள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வினாத்தாள்களை பாதுகாப்புடன் தாமதமின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்வதோடு, பொதுத்தோ்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து ஆசிரியா்களுக்கும் முழு விவரங்களை கல்வித்துறை அலுவலா்கள் தெரிவித்து தயாா்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முட்டப்பதியில் மாா்ச் 4இல் அய்யா அவதார தின விழா

அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளில் முட்டப்பதியில் அய்யாவின் 193 ஆவது அவதார தினவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதையொட்டி, முட்டபதியில் அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், உகப்ப... மேலும் பார்க்க

கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா... மேலும் பார்க்க

தக்கலை கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

தக்கலையில் சூப்பா் மாா்க்கெட் கடையில் நூதன முறையில் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அண்ணாசிலை அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட் கடைக்கு புதன்கிழமை வந்த 2 பெண்கள... மேலும் பார்க்க

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க