செய்திகள் :

பிளாஸ்டிக்கை தடை செய்த ஜோ பைடன்: தடையை நீக்கிய ட்ரம்ப் - சொல்லும் காரணம் தெரியுமா?

post image

முன்னாள் அதிபர் ஜோ பைடன், 2035-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளையும் படிப்படியாக ஒழிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் முதல்படியாக படிப்படியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் திட்டம் ஒன்றை செயல்படுத்தியிருந்தார். அதன் அடிப்படையில், அமெரிக்காவில் பிளாஸ்டிக் பயன்பாடும் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜோ பைடனுக்குப் பிறகு அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கிறார். இவர் பதவியேற்றதிலிருந்தே மூன்றாம் பாலினத்தை தடை செய்தது, சட்டவிரோத குடியேறிகளை நாட்டைவிட்டு அப்புறப்படுத்துவது எனத் தொடர்ந்து பரபரப்புடனும், சர்ச்சைக்குரிய வகையிலும் பணியாற்றிவருகிறார்.

ட்ரம்ப் - ஜோ பைடன்

இந்த நிலையில், ஜோ பைடன் அரசு ஒப்புதல் அளித்து செயல்பாட்டில் வந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை மீண்டும் அனுமதிக்க, முந்தைய அரசின் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அதிபர் ட்ரம்ப், ``வேலை செய்யாத பேப்பர் ஸ்ட்ராக்களுக்கான பைடனின் அபத்தமான திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவில் அடுத்த வாரம் கையெழுத்திடுவேன். பிளாஸ்டிக்கிற்குத் திரும்பு! உங்கள் வாயில் அருவருப்பான முறையில் கரையும் ஸ்ட்ரா இல்லாமல் உங்கள் அடுத்த பானத்தை அனுபவியுங்கள்!!!" எனப் பதிவிட்டிருக்கிறார்.

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்... மேலும் பார்க்க

Modi: "நீங்கள் ரோபோக்கள் அல்ல; தேர்வுதான் எல்லாம் என்று வாழக்கூடாது" - மாணவர்களுக்கு மோடி அறிவுரை

கடந்த 2018ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும், 'பரிக்சா பே சார்ச்சா' என்ற தலைப்பில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அவ்வகையில் டெல்லியில் இன்று (பிப்ரவரி 10) மாணவர்... மேலும் பார்க்க

Vijay : '2 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்' - விஜய், பிரஷாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி!

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் தவெக தலைவர் விஜய் திடீர் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார். சந்திப்பின் பின்னணி என்ன என்பதை விசாரித்தோம்.விஜய்கட்சி தொடங்கி ஓராண்டை நிறைவு செய்யவிருந்த நிலை... மேலும் பார்க்க

”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?

தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குட... மேலும் பார்க்க