செய்திகள் :

பீகார் தேர்தல்: குறைத்துகொண்ட நிதீஷ்; தக்கவைத்த சிராக் பஸ்வான் - பாஜக கூட்டணியில் தொகுதி உடன்பாடு

post image

சூடுபிடித்த பீகார் தேர்தல்!

பீகார் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் வழக்கம்போல் பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அக்கூட்டணி தங்களது தொகுதி பங்கீட்டை முதல் அணியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து அறிவித்துள்ளார்.

அதில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பா.ஜ.கவும், ஐக்கிய ஜனதா தளமும் தலா 101 தொகுதியில் போட்டியிடும். சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதர எஞ்சிய கட்சிகளான ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா மற்றும் ஹிந்துஸ்தான் அவான் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதியில் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் அதிக தொகுதிகள் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திர பிரதான்

குறைத்துக்கொண்ட நிதீஷ் குமார்!

ஆனால் இறுதியில் 6 தொகுதியில் போட்டியிட சம்மதித்துள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் 115 தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் இம்முறை அதனை 101 ஆக குறைத்துக்கொண்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி 5 தொகுதியில் போட்டியிட்டு ஐந்து தொகுதியிலும் வெற்றி பெற்றது. அந்த 5 தொகுதியில் இருந்து தங்களுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று சிராக் பஸ்வான் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் மொத்தம் 35 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டார்.

மற்ற கட்சிகளும் அதிக தொகுதிகள் கேட்டன. நேற்று இரவு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் அனைத்து கட்சிகளும் விட்டுக்கொடுத்து போகும்படி அமித் ஷா கேட்டுக்கொண்டார்.

பீகார் முழுக்க பட்டியலின வாக்காளர்கள் 6 சதவீதம் பேர் இருப்பதால் சிராக் பஸ்வானை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று கருதி அவருக்கு கடந்த முறை கொடுக்கப்பட்ட அதே 29 தொகுதியை இம்முறையும் கொடுத்துள்ளதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 52 முதல் 55 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் தங்களுக்கு 60 தொகுதிகள் கொடுக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. லாலு பிரசாத் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கோர்ட் விசாரணைக்காக டெல்லி வந்துள்ளனர். டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் ராகுல் காந்தியை தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும் பேசி முடிவு செய்ய தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டுள்ளார். வரும் 15ம் தேதிக்குள் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என்று கூட்டணி கட்சியான விகாஷீல் இன்சான் கட்சி தலைவர் முகேஷ் சஹானி தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில்,''மல்லிகார்ஜுன் கார்கே தொகுதி பங்கீடு குறித்து அனைத்து கட்சிகளுடனும் பேசி வருகிறார். புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருப்பதால் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும்''என்று தெரிவித்தார்.

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வா... மேலும் பார்க்க

கரூர் துயரம்: ``காவல்துறையினர் ஏன் எங்களை வரவேற்றனர்?'' - ஆதவ் அர்ஜுனா கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பயணத்தை மேற்கொண்டார். அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழ... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசாரிக்க அதிரடி உத்தரவு

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது 41 பேர் இறந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.இதில் பாதிக்கப்பட்டவர்க... மேலும் பார்க்க

``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி

சதானந்தன் மாஸ்டர்கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சதானந்தன் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் சி.பி.எம் நிர்வாகியாக இருந்தார் சதானந்தன் மாஸ்டர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் நிர்வாகிகளால் தாக்குதலுக... மேலும் பார்க்க

`இந்து கடைகளில் பொருட்கள் வாங்குங்கள்’ - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு; விளக்கம் கேட்கும் அஜித் பவார்

மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முழு அளவில் தயாராகி வருகின்றனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந... மேலும் பார்க்க