செய்திகள் :

புணேவில் டெமு ரயிலில் திடீர் தீவிபத்து

post image

புணேவில் டாண்ட்-புணே டெமு ரயிலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

புணே மாவட்டத்தில் உள்ள யிவா அருகே இந்த சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக 55 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்ட தகவலின்படி, மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் புகைபிடித்த பிறகு ரயிலின் குப்பைத் தொட்டியில் 'பீடி'யை வீசியதாகக் கூறப்படுகிறது. இது தீ விபத்துக்கு வழிவகுத்தது என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

கேரளத்தில் கனமழைக்கு 4 பேர் பலி!

"இந்த சம்பவம் காலை 8 மணியளவில் நடந்தது. குப்பைத் தொட்டியில் காகிதங்கள் மற்றும் பிற குப்பைகள் இருந்தன. தீப்பிடித்ததும் கழிப்பறையிலிருந்து புகை கிளம்பியது. அது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

அந்த பெட்டியில் ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர் என்றும் தீ விரைவாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது. தில்லியிலிருந்து இன்று(... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்!

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

புணே: புணே மாவட்டத்தில் இந்திரயாணி ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாய... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்

புணே: புணே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த கோர வி... மேலும் பார்க்க

சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய ... மேலும் பார்க்க

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க