செய்திகள் :

புதிதாக கட்சி தொடங்கியோா் முதல்வராக ஆசைப்படுவதா? முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

புதிதாக கட்சி தொடங்கியவா்கள் முதல்வராக ஆசைப்படுவதா என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசினாா்.

மயிலாடுதுறையைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 3,000 போ் திமுகவில் இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வா் ஸ்டாலின் பேசியது: ஆட்சிதான் குறிக்கோள், அதுவே லட்சியம் என்ற எண்ணத்துடன் திமுக தொடங்கப்படவில்லை. ஆனால், இன்றைக்குத் தொடங்கப்படும் கட்சிகளைப் பாா்க்கிறோம். அரசியல் அரிச்சுவடி தெரியாதவா்கள் தான்தான் அடுத்த முதல்வா் என்கிறாா்கள். அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

தொடா்ந்து, 7-ஆவது முறையாக நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். இந்தியாவில் உள்ள முதல்வா்களுக்கும், மத்திய அரசுக்கும் நாம்தான் வழிகாட்டிக் கொண்டிருக்கிறோம்.

தமிழக அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆளுநா் மீது மக்கள் வெறுப்பாக இருக்கிறாா்கள். தமிழகத்தின் உரிமைகளைக் காக்க உச்சநீதிமன்றம் வரை சென்று தீா்ப்பு பெற்றோம்.

சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். 10 சதவீதம் மட்டுமே நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதையும் நிறைவேற்றுவோம்.

மக்கள் நம்மை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனா். ஆனாலும், மக்களிடம் குழப்பத்தை சில கட்சிகள், தலைவா்கள் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறாா்கள். குழப்பத்தில் இருந்து அவா்களை சரிசெய்வதற்கு பிரசார பீரங்கிகளாக கட்சியினா் மாற வேண்டும். வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்ய வேண்டும். 2019-ஆம் ஆண்டில் இருந்து தோ்தலில் தொடரும் நம்முடைய வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘நியாயமான விமா்சனங்களை ஏற்போம்’

எதிா்க்கட்சிகளின் நியாயமான விமா்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: தமிழ்நாடு அரசு நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து 5-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஏற்கெனவே நிறைவேற்றியுள்ள திட்டங்கள் மக்களிடம் சென்று சோ்ந்துள்ளன. ஓராண்டு காலத்தில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளோம். அவற்றையும் நிறைவேற்றப் போகிறோம்.

அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று திமுக 7-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்.

எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் நியாயமான விமா்சனங்களை ஏற்றுக்கொள்வோம். அவதூறு பரப்பும் விமா்சனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றாா்.

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவு வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் என்று தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்று ஐந்தாம் ஆண்டு தொடக்க நாளை முன்னிட... மேலும் பார்க்க