செய்திகள் :

புதிதாக கட்டப்பட்ட பாளையங்கோட்டை சந்தை; திறக்கப்படுவது எப்போது? - காத்திருக்கும் வியாபாரிகள்!

post image

பாளையங்கோட்டை புதிய மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்பதை பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை காந்தி மார்க்கெட், நெல்லை மக்களின் முக்கியமான வர்த்தகப் பகுதியாக இருந்தது. காய்கறிகள், பழங்கள், வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட அனைத்தையும் மொத்தமாக வாங்கும் இடமாக இது அறியப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடி செலவில் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது. இதில் 540 கடைகள், இரு சக்கர வாகன நிறுத்த வசதி, குளிர் சாதன சேமிப்பு, 50 டன் அளவுக்கு காய்கறி மற்றும் பழங்களை சேமிக்கக்கூடிய வசதியுடன் நவீன அம்சங்களுடன்  அமைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தை முழுமையாக செயல்படத் தொடங்கினால் அரசுக்கு வருடத்திற்கு ரூ.10.80 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி திறந்து வைத்தாலும், இதுவரை கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் உள்ளனர். முன்னாள் வணிகர்கள், “எங்களுக்கு மீண்டும் கடைகள் வழங்க வேண்டும், அதற்குரிய கட்டணத்தை செலுத்த தயாராக இருக்கிறோம்” எனக் கூறி, மாநகராட்சிக்கு மனுவும் அளித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “புதிய மார்க்கெட்டில் வணிகர்களுக்கு  கடைகளை ஒதுக்க தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்தக் கடைகள் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு முடிவடைந்தவுடன் உடனடியாக கடைகள் ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

மக்களும் வியாபாரிகளும், வழக்கு விரைவில் முடிவடைந்து, மார்க்கெட் திறக்கப்பட்டு வணிகம் பழைய நிலையை அடைய வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

சென்னை: முதல்முறையாக ஏசி வசதியுடன் புறநகர் ரயில் சேவை - இன்று முதல் தொடக்கம்; கட்டணம் எவ்வளவு?

சென்னையில் முதல்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரையில் ஏசி வசதியுடன் கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம்... மேலும் பார்க்க

NTK: `சாட்டை சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை’ - சீமானின் `திடீர்’ கண்டிப்பின் பின்னணி!

நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் துரைமுருகன் நடத்திவரும் `சாட்டை` யூட்யூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என அறிவித்திருக்கிறார் சீமான். முன்னணி நிர்வாகிகளுக்கு இடையேயான பனிப்போர்தா... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம்; கவுன்சிலரின் கணவர் மீது புகார்!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியின் 4வது வார்டு பகுதியாகிய பாபு நகரில் உள்ள பூங்கா, கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு மரங்களை வளர்த்து சிறுகாடாக மாற்றப்பட்டிருந்தது. இதில் நீர் மருது, புரசை, தே... மேலும் பார்க்க

வேலூர்: பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே செயல்படும் டாஸ்மாக் கடை.. இடம் மாற்றக் கோரும் சமூக ஆர்வலர்கள்!

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் சல்லாபுரி அம்மன் கோயில் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின... மேலும் பார்க்க

`Wifi முதல் மின்சார உற்பத்திவரை' - இந்தியாவின் முதல்`Smart Village' இப்போது எப்படி இருக்கிறது?

``காலேஜ் படிச்சிட்டு இருக்குற இவன் எதுக்கு பஞ்சாயத்து தலைவர போய் பாக்குறான்... அவர் என்கிட்ட வந்து 'என்னப்பா உன் புள்ளை என்கிட்ட கேள்விலாம் கேக்குறான்... என்னனு கவனிக்க மாட்டியானு' மொறக்கிறாரு..." என ... மேலும் பார்க்க

TASMAC Raid: "பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி" - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதி... மேலும் பார்க்க